சுரப்பா மீதான விசாரணைக்கு ஏன் தடை விதிக்கக்கூடாது? - தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி

சுரப்பா மீதான விசாரணைக்கு ஏன் தடை விதிக்கக்கூடாது? - தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சுரப்பா மீதான விசாரணைக்கு ஏன் தடை விதிக்கக்கூடாது? என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பி உள்ளது.
குமரி மாவட்டம் ஈத்தாமொழியைச் சேர்ந்த மணிதனிகை குமார், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், சுரப்பா மீதான புகார் தொடர்பாக விசாரணை குழு அமைத்து உயர் கல்வித்துறை செயலர் பிறப்பித்த அரசாணையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்" என கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு , இது போல புகார் எழுந்த அனைத்து துணைவேந்தர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? அவ்வாறு எத்தனை துணைவேந்தர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என கேள்வி எழுப்பினர். மேலும் வழக்கை டிசம்பர் 2 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
Comments