BIG STORIES
“எழுந்து எங்கடா போறீங்க..”? மேடையில் வைகோ பேச பேச காலியான சேர்களால் காண்டானார்..! செய்தியாளர்களை தாக்கியதன் பின்னணி
Jul 10, 2025 02:47 AM
697
“எழுந்து எங்கடா போறீங்க..”? மேடையில் வைகோ பேச பேச காலியான சேர்களால் காண்டானார்..! செய்தியாளர்களை தாக்கியதன் பின்னணி
ஒரு காலத்தில் வைகோ பேசுகிறார் என்றால் ஆர்ப்பரித்த தொண்டர்கள் கூட்டத்தை வைத்திருந்தது மதிமுக. கலிங்கத்துப்ரணியில் ஆரம்பித்து அக நானுறு, புர நானுற்றை மேற்கோள் காட்டி ரஷ்யா, சீனா, சிங்கப்பூர், மலேசியா வழியாக இறங்கி அவர் இந்தியாவிற்குள் நுழைந்து தமிழகம் வருவதற்குள் சில மணி நேரங்கள் கடந்து சென்றிருக்கும் அப்படி இருந்தும், அசராமல் வைகோவின் உரையை காதை தீட்டிக் கேட்ட காலம் ஒன்று இருந்தது.
ஆனால் இன்று வைகோ பேசும்போதே மதிமுக தொண்டர்கள் கொத்து கொத்தாக எழுந்து சென்றதால் காலியாக கிடக்கும் இந்த சேர்கள் தான் இத்தனை களேபாரத்துக்கும் காரணம்..!
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் தனியார் திருமண மண்டபத்தில் நெல்லை மண்டல மதிமுக முகவின் ஆலோசனை கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அரங்கம் நிறைந்து காணப்பட்ட இந்த கூட்டத்தில் போர்க்குணம் கொண்ட போர்வாள் என்று தொண்டர்களால் புகழப்படும் வைகோ வழக்கம் போல அகநானுறு.. புற நானுறு.. எல்லாம் கலந்து கட்டி ஒரு மணி நேரத்திற்கு மேலாக மூச்சை பிடித்து உரை வீச்சு நிகழ்த்தினார்.
பழைய பாணியிலேயே நீட்டி முழக்கி பேசியதாலோ.. என்னவோ.. தெரியவில்லை, வைகோவின் உரையைக் கேட்க பொறுமை இல்லாமல் கட்சித் தொண்டர்கள் கொத்து கொத்தாக எழுந்திரிச்சி வெளியேறினர். இதனால் பாதிக்கும் மேல் மண்டபத்தில் காலி சேர்களாக காட்சி அளித்தது
எங்கே எழுந்து செல்கிறீர்கள் ? என்றும் தொண்டர்களை உள்ளே வந்து அமரும் படி கெஞ்சி கேட்டுக் கொண்டும் , எவரும் வராததால் வைகோ போனால் போகட்டும் போடா ?என்பது போல பேச்சை பாதியில் நிறுத்தி விட்டு அமர்ந்து விட்டார்
தொண்டர்கள் வெளியேறிய காட்சியையும் காலியான இருக்கைகளையும் செய்தியாளர்கள் படம் பிடிப்பதை கண்டதும் ஆவேசமான மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களை காலிப்பயல்கள் என்று திட்டியதோடு அவர்களை வெளியேற்றுமாறு உத்தரவிட்டார்.
ஒரு கட்டத்தில் தான் ஒரு முது பெரும் அரசியல் தலைவர் என்பதையும் மறந்து, உடனடியாக கேமராவில் உள்ள பிலிம் ரோல்களை எல்லாம் உருவுங்கள் என்று ஆணையிட்டார் வைகோ
கேமராவில் பிலிம் ரோல் போய், சிப் வந்து விட்ட தகவல் கூட வைகோவின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படவில்லை என்பது கூடுதல் சோகம். வைகோவின் தூண்டுதலை அடுத்து மதிமுகவினர் செய்தியாளர்களை கடுமையாக தாக்கி மண்டபத்துக்கு வெளியே விரட்டினர்
இதனால் அங்கு பதற்றமான சூழ் நிலை உருவானது . அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் வந்து செய்தியாளர்களை மீட்டு காவல் நிலையம் அழைத்து சென்றனர். அப்போது வைகோவின் தூண்டுதலின் பேரில் தங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக செய்தியாளர்கள் போலீசில் புகார் அளிக்கப்பட்டது
மேலும் மதிமுகவினரின் தாக்குதலில் காயம் அடைந்த 2 செய்தியாளர்கள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டனர்.
இவ்வளவு களேபாரத்துக்கும் நடுவிலும் ... உக்கிரமாக அமர்ந்திருந்த வைகோவிற்கு அருகில் அமர்ந்திருந்த மதிமுக நிர்வாகி ஒருவர் தன்னை சுற்றி என்ன நடக்கின்றது என்பதை பற்றி எல்லாம் சிறிதும் கவலைப்படாமல் மேடையிலேயே ரீல்ஸ் பார்த்துக் கொண்டிருந்ததுதான் இந்த செயல் வீரர்கள் கூட்டத்தின் ஹை லைட்..!
வன்முறையை தொண்டன் கையில் எடுத்தாலும், தலைவன் தூண்டிவிட்டாலும் குற்றம் கேடு தரும்..!
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu