RECENT NEWS

ஆசிரியை பெயரில் கடன் தொகையை மாற்றி அனுப்பியதாகக் கூறி  ரூ.9.41 லட்சம் மோசடி

அரசியல்

வைகோவுக்கு என்னாச்சி... ஃபிலிம் ரோல் அந்து நாளாச்சி.. செய்தியாளர்கள் மீது தாக்குதல்..! பேச்சை கேட்க ஆளில்லாததால் ஆவேசம்

Jul 10, 2025 01:26 AM

227

வைகோவுக்கு என்னாச்சி... ஃபிலிம் ரோல் அந்து நாளாச்சி.. செய்தியாளர்கள் மீது தாக்குதல்..! பேச்சை கேட்க ஆளில்லாததால் ஆவேசம்

வைகோவுக்கு என்னாச்சி... ஃபிலிம் ரோல் அந்து நாளாச்சி.. செய்தியாளர்கள் மீது தாக்குதல்..!

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் நடந்த மதிமுக ஆலோசனை கூட்டத்தில் வைகோ பேசும் போது தொண்டர்கள் எழுந்து செல்வதை படம் பிடித்த செய்தியாளர்கள் மீது வைகோ தூண்டுதலின் பேரில் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

ஒரு காலத்தில் வைகோ பேசுகிறார் என்றால் ஆர்ப்பரித்த தொண்டர்கள் கூட்டத்தை வைத்திருந்தது மதிமுக. ஆனால் இன்று வைகோ பேசும்போதே மதிமுக தொண்டர்கள் கொத்து கொத்தாக எழுந்து சென்றதால் காலியாக கிடக்கும் இந்த சேர்கள் தான் இத்தனை களேபரத்துக்கும் காரணம்..!

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் தனியார் திருமண மண்டபத்தில் நெல்லை மண்டல மதிமுக ஆலோசனை கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அரங்கம் நிறைந்து காணப்பட்ட இந்த கூட்டத்தில் போர்க்குணம் கொண்ட போர்வாள் என்று தொண்டர்களால் புகழப்படும் வைகோ வழக்கம் போல அகநானுறு.. புறநானுறு.. எல்லாம் கலந்து கட்டி ஒரு மணி நேரத்திற்கு மேலாக மூச்சை பிடித்து உரை வீச்சு நிகழ்த்தினார்.  

அவரது நீண்ட உரையைக் கேட்க பொறுமை இல்லாமல் கட்சித் தொண்டர்கள் கொத்து கொத்தாக வெளியேறினர். இதனால் பாதிக்கும் மேல் மண்டபத்தில் காலி சேர்களாக காட்சி அளித்தது

தொண்டர்கள் வெளியேறிய காட்சியையும் காலியான இருக்கைகளையும் செய்தியாளர்கள் படம் பிடிப்பதை கண்டதும் ஆவேசமான மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களை காலிப்பயல்கள் என்று திட்டி வெளியேற்றுமாறு உத்தரவிட்டார்.

ஒரு கட்டத்தில் தான் ஒரு முதுபெரும் அரசியல் தலைவர் என்பதையும் மறந்து, உடனடியாக கேமராவில் உள்ள பிலிம் ரோல்களை எல்லாம் உருவுங்கள் என்று ஆணையிட்டார் வைகோ

கேமராவில் பிலிம் ரோல் போய், சிப் வந்து விட்ட தகவல் கூட வைகோவின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படவில்லை என்பது கூடுதல் சோகம். வைகோவின் தூண்டுதலை அடுத்து மதிமுகவினர் செய்தியாளர்களை தாக்கி மண்டபத்துக்கு வெளியே விரட்டினர்.

இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை உருவானது . அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் வந்து செய்தியாளர்களை மீட்டு காவல் நிலையம் அழைத்து சென்றனர். அப்போது வைகோவின் தூண்டுதலின் பேரில் தங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக செய்தியாளர்கள் போலீசில் புகார் அளிக்கப்பட்டது

மேலும் மதிமுகவினரின் தாக்குதலில் காயம் அடைந்த 2 செய்தியாளர்கள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டனர்.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

பன்றியை வேட்டையாடுவது போல இளைஞரை விரட்டி சென்று வெட்டிக் கொன்ற போதை கும்பல்..!  கருவேலங்காட்டிற்குள் நடந்தது என்ன ?
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies