BIG STORIES
அம்மாவோட ட்ரீட்மெண்டுக்கு லோன் கேட்டேன்... ரூ 31,000 ஏமாத்திட்டா; ஆட்டோ டிரைவரிடம் எப்படியெல்லாம் உருட்டுறா பாருங்க!
Jul 10, 2025 01:40 PM
123
அம்மாவோட ட்ரீட்மெண்டுக்கு லோன் கேட்டேன்... ரூ 31,000 ஏமாத்திட்டா; ஆட்டோ டிரைவரிடம் எப்படியெல்லாம் உருட்டுறா பாருங்க!
பஜாஜ் ஃபைனான்ஸில் லோன் என வந்த விளம்பரம்... அம்மாவின் ட்ரீட்மெண்டுக்கு லோன் கேட்டு கெஞ்சிய ஆட்டோ டிரைவர்... அவரிடமே 31,000 ரூபாயை கறந்த ஜெகஜ்ஜால கில்லாடி பெண். எப்படியெல்லாம் உருட்டி ஏமாற்றியிருக்கிறார், என்ற ஆடியோ ஆதாரங்களுடன் விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு...
சென்னை காசிமேடு பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் விஜய் என்பவருக்கு செல்ஃபோனில், தனிநபர் வங்கிக்கடன் வழங்குவதாக விளம்பரம் வந்துள்ளது. அவரது தாயாருக்கு உடல் நிலை சரியில்லாததால், கடன் வாங்கி மருத்துவ சிகிச்சை பெற திட்டமிட்டுள்ளார், விஜய்.
இதனைத் தொடர்ந்து, அந்த விளம்பரத்தில் இருந்த தொடர்பு எண்ணை தொடர்புகொண்டு, ஆட்டோ ஓட்டுனர் விஜய், லோன் தொடர்பாக பேசி உள்ளார்.
பஜாஜ் ஃபைனான்ஸ் நிறுவனத்திலிருந்து பேசுவதாகவும் தனது பெயர் மஞ்சு ராகவேந்திரன் என்றும் அறிமுகப்படுத்திக்கொண்டு பேசிய அந்த பெண், கடன் தொகைக்கு ப்ராசஸிங் ஃபீஸாக ரூ. 3,500 கட்டச் சொல்லி உள்ளார். 4 லட்ச ரூபாய் லோனுக்கு 3,500 ரூபாய்தானே? என விஜய்யும் ஜி பே மூலம் அனுப்பியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, மேலும் ரூ. 12,800 இன்சூரன்ஸ் கட்ட வேண்டும் என்று அப்பெண் கூறியுள்ளார். ஏற்கனவே, 3,500 ரூபாய் கட்டிவிட்டோம். எப்படியாவது, லோனை வாங்கினால் அம்மாவின் ட்ரீட்மெண்ட், வீட்டு செலவுகளைப் பார்த்துக்கொள்ளலாம் என்று யோசித்த விஜய், கடன் வாங்கி அந்த தொகையை அனுப்பியதாக கூறப்படுகிறது.
அப்படியும், கடன் தொகை அவருக்கு வரவில்லை. சிறிது நேரம் கழித்து மீண்டும் அந்த பெண் அவரிடம் பேசி, ஜிஎஸ்டி வரி கட்ட வேண்டும். இன்னும் ரூ. 15 ஆயிரம் அனுப்புங்கள் என்று கூறியுள்ளார். வேறு வழியில்லாமல் அதற்கும் விஜய் கடன் வாங்கி கியூஆர் கோடு மூலம் செலுத்தி உள்ளார்.
ஆனால், லோன் எப்போது கிரெடிட் ஆகும் என்றால் இதோ ஆகிவிடும், அதோ ஆகிவிடும். உங்களுக்கு ப்ராசஸ் ஆகிவிட்டது. ஆனால், உங்களுக்கு காண்பிக்காமல் உள்ளது. இன்னும் பணம் அனுப்பவேண்டும் என தொடர்ந்து அந்த பெண் பணம் கேட்பதிலேயே குறியாக இருந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, தான் ஏமாற்றப்பட்டிருக்கிறோம் என்பதை உணர ஆரம்பித்துள்ளர். மேலும், பணத்தை ஏமாற்றிய அந்த பெண், செல்ஃபோன் நம்பரை ஸ்விட்ச் ஆஃப் செய்ததாக கூறப்படுகிறது.
மேலும், தன்னை பஜாஜ் ஃபைனான்ஸ் நிறுவனத்தின், கஸ்டமர் ரிலேஷன் ஷிப் ஆஃபிஸர் என்று கூறிக்கொண்டதோடு, ஒரு ஐ.டி. கார்டையும் அனுப்பி ஏமாற்றியுள்ளார்.
பணத்தை ஏமாந்த ஆட்டோ ஓட்டுநர் விஜய், காசிமேடு காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தார். அவர்கள், சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கும்படி அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.
உடனே, வடக்கு மண்டல சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றுள்ளார். ஆனால், புகாரை போலீசார் பெறவில்லை. 1930 எண்ணில் தொடர்புகொண்டு புகார் அளிக்கும்படி அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, 1930 க்கு தொடர்பு கொண்டுள்ளார். ஆனால், அங்கேயும் புகாரை பெறவில்லை. ஆன்லைனில் புகார் கொடுக்கும்படி தெரிவித்ததால், தனக்கு ஆன்லைனில் புகார் அளிக்க தெரியாது என கூறி காசிமேடு காவல் நிலையத்திற்கே மீண்டும் சென்று முறையிட்டுள்ளார்.
ஆனால், அவரது புகார் பெறப்படவில்லை எனக்கூறப்படுகிறது. சைபர் கிரைம் மூலம் பணத்தை இழந்தால் 48 மணி நேரத்தில் புகார் அளித்தால் பணத்தை பெற இயலும் என்றெல்லாம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள், போலீசார்.
ஆனால், பாதிக்கப்பட்டவர்கள் புகாரை பதிவுசெய்யவே 48 நாட்கள் ஆகிவிடும் போலிருக்கிறது. புகார்களைக் கூட வாங்காமல், பணத்தை இழந்தவர்களை அலைக்கழித்து கொண்டிருப்பதால்தான், சைபர் திருடன்கள் தொடர்ந்து சைபர் குற்றத்தில் ஈடுபட்டுவருகிறார்கள் என பொதுமக்கள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu