மாமியார் கழுத்தை நெறித்துக் கொலை செய்த மருமகள்
Aug 11, 2025
குறைந்தது தங்கத்தின் விலை - எவ்வளவு தெரியுமா..?
Aug 11, 2025
BIG STORIES
சீரியல் டூ அரசியல் டூ சீரியல்.. மீண்டும் நடிக்கிறார் ஸ்மிருதி இரானி.. `ஒரு எபிசோடுக்கு இவ்வளவு சம்பளமா?'
Jul 10, 2025 12:52 PM
100
சீரியல் டூ அரசியல் டூ சீரியல்.. மீண்டும் நடிக்கிறார் ஸ்மிருதி இரானி.. `ஒரு எபிசோடுக்கு இவ்வளவு சம்பளமா?'
முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி 15 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க இருப்பதாக வெளியான செய்தி, அவரது ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தொலைக்காட்சி தொடர் நடிகையாக தனது வாழ்க்கையைத் தொடங்கிய ஸ்மிருதி இரானி, ஏக்தா கபூர் இயக்கிய தொடர்களில் நடித்து பிரபலமானார். 1998 ஆம் ஆண்டு நடைபெற்ற மிஸ் இந்தியா அழகுப் போட்டியிலும் பங்கேற்று இருக்கிறார்.
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராமாயணம் தொடரில் சீதா கதாபாத்திரத்தை ஏற்று நடித்த, இவர், தொடர்ந்து பல்வேறு டிவி தொடர்களில் நடித்து வந்தார்.
அதில் குறிப்பாக 2000-ல் ''கியுங்கி சாஸ் பி கபி பஹு தி'(Kyunki Saas Bhi Kabhi Bahu Thi) என்ற சீரியலில் இவர் துளரி விரானி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்தியில் மெகா ஹிட் அடித்த இந்த சீரியல் தான், அவரை பல கோடி மக்களிடம் கொண்டு சென்றது. சுமார் 8 ஆண்டுகள் அதாவது 2008 வரை அவர் அந்த சீரியலில் நடித்திருந்தார். அதைத்தொடர்ந்து, அம்ரிதா உள்ளிட்ட சில படங்களில் நடித்திருக்கிறார்.
இதற்கிடையே 2003 ஆம் ஆண்டு பாஜக-வில் இணைந்து, தனது அரசியல் பயணத்தை தொடங்கிய ஸ்மிருதி இரானி, பாஜக தேசிய மகளிர் அணி தலைவராகவும் மற்றும் தேசிய செயற்குழு உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார்.
கடந்த 2014ல் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக, உத்தர பிரதேசத்தின் அமேதி தொகுதியில், நாடாளுமன்ற உறுப்பினராக பாஜகவால் களமிறக்கப்பட்டார். இதன் மூலம் தேசிய அரசியலில் கவனம் பெற்றார். ஆனால் அந்த தேர்தலில் ராகுலிடம் தோல்வியை தழுவினார்.
இருப்பினும், ஸ்மிருதி இரானியை அமைச்சராகிய பாஜக, அமேதி தொகுதியில் தொடர்ந்து அவரை பணியாற்ற செய்தது. அதையடுத்து வந்த 2019ஆம் ஆண்டு தேர்தலில், தீவிரமாக பிரச்சாரத்தில் இறங்கிய ஸ்மிருதி இரானி, ராகுல் காந்திக்கு அதிர்ச்சி அளிக்கும் தோல்வியை கொடுத்தார்.
தொடர்ந்து 2014 முதல் 2024 வரை மத்திய அமைச்சராக இருந்த ஸ்மிருதி இரானி, கடந்தாண்டு நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில், காங்கிரஸ் வேட்பாளர் கிசோரி லால் சர்மாவிடம் தோல்வியைத் தழுவினார்.
அதற்குப்பிறகு எந்த பொறுப்புகளிலும் இல்லாமல் ஸ்மிருதி இரானி அமைதியாகவே இருந்தார்.
இந்த நிலையில் தான், பிரபல இந்தி சீரியல் இயக்குநரான ஏக்தா கபூரின் 'கியுங்கி சாஸ் பி கபி பஹு தி' என்ற தொடரின் இரண்டாம் சீசன் 25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தொடங்க இருந்தது.
ரசிகர்கள், வெகுநாட்களாக ஸ்மிருதியை மீண்டும் இந்த தொடரின் அடுத்த பாகத்தில் நடிக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தனர். இந்த நிலையில், ஸ்மிருதி இரானி 15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சின்னத் திரையில் தோன்றவிருக்கிறார்.
ஸ்மிருதி இரானி, ஆரம்பத்தில் இந்த சீரியலில் நடித்த போது, ஒரு நாளைக்கு சுமார் 1,800 ரூபாய் சம்பளம் பெற்றிருந்தார்.
தற்போது, இந்த சீரியலின் இரண்டாம் பக்கத்தில், ஒரு எபிசோடில் நடிப்பதற்காக ஸ்மிருதி இரானிக்கு 14 லட்சம் ரூபாய் சம்பளம் வழங்கப்படுவதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. இந்த சீரியல் பிரபல தொலைக்காட்சியில் ஜூலை 29ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகிறது.
மீண்டும் இத்தொடரில் நடிப்பது குறித்து கருத்து தெரிவித்த ஸ்மிருதி இரானி, “இந்தக் கதைதான் எனது வாழ்க்கையை மறுவடிவமைத்தது.
கோடிக்கணக்கான மக்கள் என்னை நேசிக்கக் காரணமானது. ஒரு தலைமுறையினரின் மனதில் எனக்கு இடம் தந்தது” என்று தெரிவித்திருக்கிறார்.
’க்யோங்கி சாஸ் பி கபி பஹு தி’ என்பதற்கு ‘மாமியாரும் ஒருகாலத்தில் மருமகளாக இருந்தவர்தான்’ என்பதுதான் நேரடி அர்த்தம்... தற்போது இந்த சிரியலில் மருமகளாகவும், மாமியாராகவும் கலக்குவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu