இங்கிலாந்தில் டிச.2ம் தேதியுடன் ஊரடங்கை முடிவுக்கு கொண்டுவர திட்டம் என தகவல்

இங்கிலாந்தில் டிச.2ம் தேதியுடன் ஊரடங்கை முடிவுக்கு கொண்டுவர திட்டம் என தகவல்
இங்கிலாந்தில் டிசம்பர் 2ம் தேதியுடன் ஊரடங்கை முடிவுக்கு கொண்டுவர அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா 2ம் அலை தொடங்கியதையடுத்து கடந்த 5ம் தேதி முதல் டிசம்பர் 2ம் தேதி வரை 4 வாரங்களுக்கு நாடு தழுவிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக புதிய பாதிப்பு எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருவதால், ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 2ம் தேதியுடன் நாடு தழுவிய ஊரடங்கு முடிவுக்கு வந்தாலும், மண்டல அளவிலான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
Comments