CCTV கேமராக்களை அதிகம் பயன்படுத்தும் நகரங்களின் பட்டியலில் இந்திய அளவில் ஐதராபாத் முதலிடம்

சிசிடிவி கேமராக்களை உலக அளவில் அதிகம் பயன்படுத்தும் முதல் 20 நகரங்களில் 16ஆவது இடத்தில் ஐதராபாத் நகரம் இருப்பதாக பிரிட்டன் நிறுவன ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டனின் கம்பாரிடெக் எனும் நிறுவனம் (UK #Comparitech Rept) இதுகுறித்து ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையை தெலுங்கானா மாநில காவல்துறை தலைவர் மகேந்தர் ரெட்டி, தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் உலக அளவில் 16ஆவது இடத்திலும், இந்திய அளவில் முதலிடத்திலும் ஐதராபாத் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐதராபாத் முழுவதும் 3 லட்சம் சிசிடிவி கேமராக்கள் கண்காணிப்புக்கு பொருத்தப்பட்டு இருப்பதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. அந்த பட்டியலில் சீனாவின் தையுவான் (Taiyuan) நகரம் நான்கு லட்சத்து 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட (4,65,255) சிசிடிவி கேமராக்களுடன் முதலிடத்தில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments