முகப்பு
ஆடி அமாவாசையையொட்டி தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுத்த மக்கள்
Jul 24, 2025 07:39 AM
70
ஆடி அமாவாசையையொட்டி தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுத்த மக்கள்
ஆடி அமாவாசையையொட்டி, ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறையில், தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் வந்து குவிந்தனர். மூன்று நதிகள் சங்கமிக்கும் இடமான பவானி ஆற்றில் நீராடி தங்களது முன்னோர்களுக்கு பிண்டம் வைத்து மூதாதையர்களை நினைவு கூர்ந்து திதி கொடுத்து சாமி தரிசனம் செய்தனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நந்தவனம் பகுதியில் ஆடி அமாவாசையை ஒட்டி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க திரளான பொதுமக்கள் குவிந்தனர். நந்தவனத்தில் காய்கறிகள் அரிசி பருப்பு உள்ளிட்டவற்றை முன்னோர்களுக்கு படையலிட்டு பிண்டம் வைத்து திதி கொடுத்து சிவனை வழிபட்டனர்.
ஆடி அமாவாசையையொட்டி காசிக்கு நிகராகக் கருதப்படும் நாகை மாவட்டம் காமேஸ்வரம் கடற்கரையில் ஆயிரக்கணக்கானோர் கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு திதி கொடுத்த்னர். சாஸ்திரம் மற்றும் அகத்தியர், தமிழ் முறைப்படி, தேவார, திருவாசகம் ஓதி முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்தனர்.
ஆடி அமாவாசையை முன்னிட்டு புதுச்சேரி கடற்கரையில் புகழ்பெற்ற சுவாமிகளின் தீர்த்தவாரி மற்றும் பொதுமக்கள் தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் மணக்குள விநாயகர், ஈஸ்வரன், உள்ளிட்ட கோயில்களிலிருந்து கொண்டு வரப்பட்ட உற்சவ மூர்த்திகள் கடலில் நீராடி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர் பக்தர்கள் கடலில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்தனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu