RECENT NEWS

சின்னத்திரை நடிகர் சங்க தலைவராக பரத் தேர்வு

முகப்பு

ஸ்விக்கி - சோமேட்டோவுக்கு டஃப் கொடுக்கும் “ZAAROZ”.. தமிழனின் உணவு டெலிவரி ஆப்..! ஓட்டல் விலையில் வீட்டுக்கு வரும் உணவு

Jul 19, 2025 02:17 PM

196

டஃப் கொடுக்கும் “ZAAROZ”

உணவு டெலிவரி செயலிகளான ஸ்விக்கி மற்றும் சோமேட்டோவுக்கு டஃப் கொடுக்கும் வகையில் சிதம்பரத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கும் தமிழரின் உணவு டெலிவரி செயலியான “ZAAROZ” க்கு நாமக்கல் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஹோட்டல் அசோசியேஷன் சார்பில் சோமேட்டோ ஸ்விகி போன்ற ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்கள் தாங்களிடம் பெரும் அதிக அளவிலான கமிஷன் தொகையை குறைத்துக் கொள்ளாவிட்டால் ஆன்லைன் வாயிலாக உணவு விற்பனை செய்ய மாட்டோம் என அறிவித்து அதனை அமல்படுத்தியுள்ளனர். அதற்கு மாற்றாக சிதம்பரத்தை சேர்ந்த ராம் பிரசாத் என்பவர் உருவாக்கிய சாரோஸ் என்ற புதிய ஆஃப் உணவு டெலிவரி ஆப் ஒன்றுக்கு நாமக்கல் ஹோட்டல் உரிமையாளர்கள் உணவுகளை வழங்கி வருகின்றனர்.

உணவு விற்பனை செய்யும் கடைகளின் எண்ணிக்கை மற்றும் அவற்றின் தரநிலை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு கமிஷன் தொகையை ஸ்வகி சோமேட்டோ போன்ற ஆன்லைன் உணவு விநியோக நிறுவனங்கள் நிர்ணயம் செய்வதாக சொல்லப்படுகிறது. அதிக ஆர்டர்கள் பெரும் ஹோட்டல்கள் அல்லது உணவு நிறுவனங்களுக்கு 30% முதல் 40% வரை கமிஷன் தொகை வசூலித்துக் கொள்வதாக கூறப்படுகின்றது.

நேரடியாக கடையில் விற்பனை செய்யப்படும் பொருளின் விலை 100 ரூபாய் என்றால் நிர்ணயிக்கப்படும் கமிஷன் தொகையை பொறுத்து கூடுதலாக விலை வைத்து ஆன்லைன் உணவு விநியோக நிறுவன வலைதளத்தில் அதன் விலை பதிவேற்றம் செய்யப்படுகிறது. ஓட்டல் விலையில் இருந்து கூடுதலாக பணம் கொடுத்து மக்கள் உணவை பெற்றுக் கொள்ளும் சூழல் உள்ளது. இதனால் இந்த மாதம் துவக்கத்தில் இருந்து சோமேட்டோ ஸ்விகி போன்ற நிறுவனங்களுக்கு உணவு டெலிவரி வழங்கப்போவதில்லை என நாமக்கல் நகர ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத்தினர் அறிவித்தனர்.

இதனையடுத்து ஹோட்டல் உரிமையாளர்கள் தமிழகத்தை பூர்வமாக கொண்ட மாற்று உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்களை அணுகி உள்ளனர். அதன்படி, கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை சேர்ந்த ராம் பிரசாத் என்பவர் தான் உருவாக்கிய "சாரோஸ்" என்ற உணவு டெலிவரி செய்யும் ஆஃப் குறித்து ஹோட்டல் உரிமையாளர்களிடம் எடுத்துரைத்தார். அவர்களுக்கு அது பிடித்து போகவே நாமக்கல் நகரில் சாரோஸ் ஆஃப்பில் மட்டும் ஓட்டல் விலைக்கே வீடு தேடி செல்கிறது உணவு என்றனர் ZAAROZ ஊழியர்கள்.

சாரோஸ் ஆஃப்பில் ஹோட்டல்களில் உணவு வகைகள் எவ்வுளவு ரூபாய் விற்பனை செய்யப்படுகிறதோ அதனை மட்டுமே ஆஃப்பில் பதிவேற்றம் செய்கின்றன. டெலிவரி குறைவான கட்டணம் வாடிக்கையாளர்களிடம் வசூலிக்கப்படுகிறது. மேலும் உணவகங்களிலிருந்து மாதாந்திர அடிப்படையில் சந்தாக்களை மட்டுமே பெறுகிறது. அதன்படி உணவகங்களிடம் இருந்து சாரோஸ் நிறுவனத்திற்கு மாதம் 3,000 ரூபாயுடன் 18% ஜிஎஸ்டியை செலுத்தினால் போதும் எனக்கூறப்படுகின்றது.

தற்போது, நாமக்கல் நகரில் சுமார் 80க்கும் மேற்பட்ட உணவகங்கள் இந்த புதிய ஆன்லைன் உணவு விநியோக தளத்தில் இணைந்து, அதன் மூலம் உணவை வழங்கத் தொடங்கியுள்ளன. முன்னதாக, இந்த உணவகங்கள் ஸ்விக்கி மற்றும் ஜொமாட்டோ போன்ற பிற முக்கிய ஆன்லைன் உணவு விநியோக ஒருங்கிணைப்பாளர்களுக்கு ஒவ்வொரு மாதமும் 20,000 முதல் 30,000 வரை கமிஷனாக செலுத்தின. "இப்போது, 90% பணத்தை மிச்சப்படுத்த முடிகிறது என்கின்றனர் ஓட்டல் உரிமையாளர்கள்

மற்ற ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களை காட்டிலும் ZAAROZ நாமக்கல் மாவட்ட மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. கடந்த 10 நாட்களில் மட்டும் நாமக்கல் நகரில் 10 ஆயிரம் வாடிக்கையாளர்கள் பிளே ஸ்டோரில் இந்த ஆஃப்பை பதிவிறக்கப் செய்து உணவுகளை ஆர்டர் செய்து வருகின்றனர். நாமக்கல் நகரில் கடந்த 10 நாட்களில் மட்டும் சாரோஸ் ஆஃப் மூலம் மட்டும் 10 லட்சம் ரூபாய் உணவு வர்த்தகம் நடந்துள்ளது.

இதுகுறித்து டெலிவரி ஊழியர்கள் கூறுகையில், மற்ற ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களை காட்டிலும் சாரோஸ் ஆஃப்பில் கூடுதல் வருவாய் கிடைப்பதாகவும் ஒரு டெலிவரி செய்யும் ஊழியருக்கு நாள் ஒன்றுக்கு 20 முதல் 30 ஆர்டர் கிடைப்பதாகவும் தெரிவித்தனர். உணவு டெலிவரி செய்வதற்கு மின்சாரத்தால் இயங்க கூடிய இருச்சக்கர வாகனம் எந்த கட்டணமுமின்றி நிறுவனத்தால் வழங்கப்படுகின்றது. சார்ஜ் முடிந்து விட்டால் அலுவலகத்திற்கு வந்து பேட்டரியை மாற்றி எடுத்து செல்லலாம் எனவும் தெரிவித்தனர்.

தற்போது நாமக்கல் நகர ஹோட்டல் உரிமையாளர்களை பின்பற்றி திருச்செங்கோடு மற்றும் ராசிபுரத்தில் உள்ள ஹோட்டல் உரிமையாளர்களும் சோமேட்டோ ஸ்விகி போன்ற நிறுவனங்களுக்கு உணவு வழங்காமல் நிறுத்தி வைத்துவிட்டு "சாரோஸ் ஆஃப்" நோக்கி நகர தொடங்கி உள்ளனர்.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

சென்னை பல்கலைக்கழக விடுதியில் மாணவிக்கு குழந்தை பிறந்ததால் பரபரப்பு..!காதலன் போலீசில் சிக்கினான்
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies