BIG STORIES
விவசாயியை பிடித்து தாக்கிய ஆக்ஸிஸ் வங்கி ஊழியர்கள்.. புகார் அளிக்க சென்றது தவறா..?
Jul 19, 2025 01:27 AM
230
விவசாயியை பிடித்து தாக்கிய ஆக்ஸிஸ் வங்கி ஊழியர்கள்.. புகார் அளிக்க சென்றது தவறா..?
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் கடன் தவணனையை முறையாக செலுத்தவில்லை எனக் கூறி விவசாயியை இழுத்துச்சென்று ஆக்ஸிக் வங்கி ஊழியர்கள் தக்கியதாக எழுந்துள்ள புகார் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
விவசாயி பெற்ற கடனில் 15 ஆயிரம் ரூபாய் தவணை தொகை கட்ட காலதாமதமானதாக கூறி விவசாயியை பிடித்து தாக்கிய வங்கி கலெக்சன் ஊழியர்களை பொதுமக்கள் சுற்றிவளைத்து கேள்வி எழுப்பிய காட்சிகள் தான் இவை..!
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வலையப்பட்டியைச் சேர்ந்த 56 வயது விவசாயி முருகேசன், மணப்பாறையில் உள்ள ஆக்ஸிஸ் வங்கியில் 40 ஆயிரம் ரூபாய் கடனாக பெற்றிருந்தார். தன் கடனாக பெற்ற 40 ஆயிரம் ரூபாயில் 24 தவணைகளில் 17 தவணை செலுத்தியதாக கூறப்படுகிறது. மீதம் உள்ள 7 மாத தவணை தொகையான 15 ஆயிரம் ரூபாய் கட்ட தாமதமானதாக கூரப்படுகின்றது. இதனால் வீடு தேடி சென்ற வங்கி ஊழியர்கள் அவரது மனைவி குறித்து தரக்குறைவாக பேசியதால், “உங்களிடம் பணம் செலுத்த முடியாது வங்கிக்கு நேரடியாக வருவதாக முருகேசன் தெரிவித்துள்ளார்.
சம்பவத்தன்று மினிபஸ்ஸில் ஏறி வங்கியில் புகார் அளிக்க சென்றவரை வங்கி ஊழியர்கள் இருவரும் மினிபஸ்ஸின் இடதுபுறமும், வலது புறமும் எஸ்கார்டு போல பின் தொடர்ந்து சென்று உள்ளனர். முருகேசன் மணப்பாறையில் உள்ள ஆக்ஸிஸ் வங்கிக்கு சென்ற போது அவரை தடுத்த கலெக்சன் ஊழியர்கள் இருவரும், அவரை மடக்கிப்பித்து கீழ்தளத்தில் உள்ள கார் பார்க்கிங் பகுதிக்கு இழுத்துச்சென்று சரமாரியாக தாக்கியதாக கூரப்படுகின்றது.
அப்போது முருகேசன் கதறி அழும் சத்தத்தை கேட்ட அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுநர்கள் பதறியபடி ஓடிச்சென்று வங்கி ஊழியரியரிடமிருந்து முருகேசனை மீட்டுள்ளனர்.
“அப்பா வயதுள்ள பெரியவரை எப்படி தாக்கலாம் ” ?என்று கேட்டு அங்கிருந்தவர்கள் வங்கி கலெக்சன் ஊழியர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தகவலறிந்த மணப்பாறை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை செய்ததுடன் தாக்குதல் நடத்திய வங்கி ஊழியரை காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். தாக்கப்பட்ட விவசாயி முருகேசன் மணப்பாறை அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
மனைவி குறித்து தன்னிடம் ஆபாசமாக பேசி தன்னை தாக்கியதாக அந்த விவசாயி வேதனை தெரிவித்தார். இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்கள் அனைவரும் 20 முதல் 22 வயது வரை உள்ள இளைஞர்கள் என்றும் 15 ஆயிரம் ரூபாய் கடனுக்காக கடுமையாக தாக்கி சித்ரவதை செய்ததால் வலி தாங்காமல் அழுததாகவும் அவர் தெரிவித்தார். சம்பந்தப்பட்ட வங்கி கலெக்சன் ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu