RECENT NEWS

தன்னை எம்ஜிஆர், ஜெயலலிதா போல் நினைத்துக்கொண்டு இ.பி.எஸ். பேசி வருகிறார் - முதலமைச்சர்

BIG STORIES

“உசுரே உனக்கு தான்” என்று ஆசையை தூண்டி கம்பி நீட்டிய தமிழ் சினிமா இசையமைப்பாளர்..! போதையில் தாக்கியதாக இரு வழக்குகள்..!

Jul 19, 2025 01:21 AM

786

“உசுரே உனக்கு தான்” என்று ஆசையை தூண்டி கம்பி நீட்டிய தமிழ் சினிமா இசையமைப்பாளர்..! போதையில் தாக்கியதாக இரு வழக்குகள்..!

“உசுரே உனக்கு தான்” என்று ஆசையை தூண்டி கம்பி நீட்டிய தமிழ் சினிமா இசையமைப்பாளர்..!

தமிழ் திரையுலக இசையமைப்பாளரான சவுந்தர்யனின் மகனும், மையல் படத்தின் இசையமைப்பாளருமான அமர்கீத் மீது தாலி கட்டாமல் குடித்தனம் நடத்தி விட்டு ஏமாற்றியதாக சட்டக்கல்லூரி மாணவி அளித்த புகாரில் போலீசார் இரு வழக்குகள் பதிவு செய்துள்ளனர். போதையில் காதலியை தாக்கியதால் வம்பு வழக்கில் சிக்கிய பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு..

கண்கள் ஒன்றாக கலந்ததா... என்று காதலுக்கு தேசிய கீதம் போன்ற பாடலை சேரன் பாண்டியன் படத்திற்காக தனது இசையமைப்பில் உருவாக்கிக் கொடுத்தவர் இசையமைப்பாளர் சவுந்தர்யன்..!

ஆத்தாடி என்ன உடம்பு என்று சிந்து நதிபூவில் சவுந்தர்யன் போட்ட மெட்டையும் பாட்டையும் திருடித்தான் இன்றைய இளம் இசையமைப்பாளர்கள் ரீமிக்ஸ் செய்து வருகின்றனர்.

உசுரே உனக்குத்தான்... உள்ளமே உனக்கு தான்.. என்று காதலர்களுக்கு மெட்டுப்போட்ட இசையமைப்பாளரின் மகன் அமர் கீத் மீது தான், காதலித்த சட்ட கல்லூரி மாணவியை ஏமாற்றி கருக்கலைத்து கம்பி நீட்டிவிட்டதாக இரு வழக்குகளை காவல்துறையினர் பதிவு செய்துள்ளனர். தந்தை வழியில் அமர் கீத்தும் மையல் என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி காதலுக்கு உயிரூட்டி உள்ளார்

மதுரவாயலில் உள்ள சட்டக்கல்லூரி மாணவி ஒருவர் பரபரப்பு புகார் ஒன்றை அண்மையில் விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்தார். அதில் சட்டக்கல்லூரில் தன்னுடன் ஒன்றாக படித்து வந்த அமரகீத் , தன்னை 4 ஆண்டுகளாக தீவிரமாக காதலித்து வந்ததாகவும், வீட்டில் அவரது தாய் தந்தை இல்லாத சமயத்தில் வீட்டிற்கு அழைத்து சென்று கணவன் மனைவி போல தாலி கட்டாமல் குடித்தனம் நடத்தியதாக குறிப்பிட்டுள்ளார். அமர் கீத்துக்காக 20 லட்சம் ரூபாய்க்கு மேல் தனது தாத்தாவின் பென்சன் பணத்தை எடுத்து கொஞ்சம் கொஞ்சமாக கொடுத்திருப்பதாகவும், சம்பவத்தன்று படம் பார்க்க சென்று விட்டு இருவரும் காரில் அமர்ந்து இருக்கும் போது , புதிதாக ஒரு பெண் அமர் கீத்தை செல்போனில் தொடர்பு கொண்டார்.

அந்த பெண் யார் என்று விசாரித்த போது தனக்கு திருமணம் நிச்சயமாகிவிட்டது என்றும் அந்த பெண் தான் பேசினார் என்றும் கூறியதால் மன ரீதியாக கடுமையான உளைச்சலுக்குள்ளானேன். தட்டிக்கேட்டதால் என்ன கடுமையாக தாக்கினார். இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டேன் என்று புகாரில் குறிப்பிட்டு உள்ளார்.

அவருடன் 4 வருடங்கள் வாழ்ந்த நிலையில் தன்னை ஏமாற்றி விட்டு வேறு பெண்ணை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார். இது குறித்து அவரது தாயிடம் கேட்டால் தனது மகன் சினிமாவில் பிரபலமான இசையமைப்பாளராக போகிறான். அவனுக்கு டாக்டர் பெண்ணை பார்த்துள்ளோம் என்றும் வரதட்சனையாக கோடிக்கணக்கில் கொடுக்கிறார்கள் என்றும் உன்னால் அவ்வளவு வரதட்சனை கொடுக்க முடியாது என்று கூறி இழிவு படுத்தியதாக கூறி உள்ளார்.

மேலும் தான் அமர்கீத்துக்காக நிறைய பணம் செலவழித்துள்ளேன் என்றதும் அவரது தாயார் தன்னுடைய பையனும் தான் உனக்கு நிறைய கொடுத்திருக்கானாம், 2 பேர் கொடுத்ததையும் ஒன்று விடாமல் ஆதாரத்துடன் எழுதிக்கொண்டு வா.. கணக்கு பார்த்து தீர்த்துக் கொள்வோம் என்று செல்போனில் கறாராக கூறியதாக அந்த மாணவி தெரிவித்தார்

உங்க பையன் அடிச்சி தன்னுடைய மூளையில் பாதிக்கப்பட்டுள்ளது என்ன செய்யிறது ? என்று கதறிய மாணவியை, வீட்டுக்கு வரவழைத்து தங்கள் குடும்பத்துக்கு கவுரம் இருக்கின்றது என்றும் கூறி அவரை வீட்டு வாசலில் காத்திருக்க வைத்து திருப்பி அனுப்பியதாக பாதிக்கப்பட்ட அந்த மாணவி தெரிவித்தார்

இதையடுத்து அமர்கீத் அவரது தாய் அமராவதி ஆகியோர் மீது மாணவி ஆதரங்களுடன் அளித்த புகாரில் விருகம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த சம்பவத்தின் தொடர்ச்சியாக மீண்டும் தன்னை காரில் அழைத்துச்சென்று கடுமையாக தாக்கியதாக அந்த மாணவி அளித்த புகாரின் பேரில அமர் கீத் மீது மாம்பலம் அனைத்து மகளிர் போலீசாரும் 2 வதாக வழக்கு ஒன்றையும் பதிவு செய்தனர்.

சென்னை ஜவுளி தொழில் நுட்ப நிறுவனத்தில் முதல்வராக இருக்கும் அமராவதி தனது செல்வாக்கை பயன் படுத்தி போலீசார் நடவடிக்கையை தடுத்து வைத்திருப்பதாகவும், பாதிக்கப்பட்ட மாணவியை வெறுப்பேற்றும் வகையில் இன்ஸ்டா கிராமில் அமர் கீத் நிச்சயதார்த்த வீடியோக்களை வெளியிட்டு வருவதாகவும் கூறப்படுகின்றது.

அதே நேரத்தில் தனது மகன் மற்றும் மனைவி மீதான இந்த புகாரை தாங்கள் சட்டரீதியில் எதிர் கொண்டு வருவதாக இசையமைப்பாளர் சவுந்தர்யன் தெரிவித்தார்.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

ஒரு பெண்ணுடன் உல்லாசமாக இருந்தால் 5,000 ரூபாய் சம்பளம்!.. Call Boy Job ரெடியா? கரும்பு தின்னக்  கூலி... தினம் தினம் ஜாலி... மாறிய Climax
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies