RECENT NEWS

பாய் ஃபிரண்ட் பாவச் செயல்.... கேர்ள் பிரண்ட் Just miss..! AI சேட்டை.. போலீஸ் வேட்டை..!

பாய் ஃபிரண்ட் பாவச் செயல்.... கேர்ள் பிரண்ட் Just miss..! AI சேட்டை.. போலீஸ் வேட்டை..!

May 23, 2025

பாய் ஃபிரண்ட் பாவச் செயல்.... கேர்ள் பிரண்ட் Just miss..! AI சேட்டை.. போலீஸ் வேட்டை..!

பாய் ஃபிரண்ட் பாவச் செயல்.... கேர்ள் பிரண்ட் Just miss..! AI சேட்டை.. போலீஸ் வேட்டை..!

May 23, 2025

முகப்பு

அய்யா கோவிலில் அக்கிரமம்.. “வரிகொடுக்காம ஏம்லே வார..”? பள்ளி மாணவன் படுகொலை..! கல்லூரி மாணவன் கத்தியுடன் சரண்

Apr 28, 2025 03:36 PM

599

அய்யா கோவிலில் அக்கிரமம்.. “வரிகொடுக்காம ஏம்லே வார..”? பள்ளி மாணவன் படுகொலை..! கல்லூரி மாணவன் கத்தியுடன் சரண்

அய்யா கோவிலில் அக்கிரமம்.. “வரிகொடுக்காம ஏம்லே வார..”? பள்ளி மாணவன் படுகொலை..!

கன்னியாகுமரி மாவட்டம் மாதவபுரம் அய்யா கோவில் திருவிழாவுக்கு சென்ற பள்ளி மாணவனை கத்தியால் குத்திக் கொலை செய்து விட்டு கல்லூரி மாணவர் காவல் நிலையத்தில் சரண் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

`தாழக்கிடப்பாரை தற்காப்பதே தர்மம்' என்று போதித்த அய்யா வைகுண்டரின் கோவிலுக்குள் வைத்து இந்த கொடூர கொலை சம்பவம் நடந்துள்ளது

கன்னியாகுமரி அடுத்த மாதவரத்தில் அய்யா வழி மக்கள் , அய்ய வைகுண்டருக்கு கோவில் கட்டி வழிபாடு நடத்தி வருகின்றனர். இந்த கோவிலில் கடந்த 18 தேதி முதல் சித்திரை திருவிழா நடைபெற்று வந்தது. 10-வது நாள் திருவிழாவையொட்டி மாதவபுரம் கண்ணன் என்பவரது 16 வயது மகன் விஷ்ணு பரத் கோவிலுக்கு சென்றுள்ளார். பள்ளி ஒன்றில் 11 ஆம் வகுப்பு படித்து வந்த விஷ்ணுபரத், அய்யா கோயில் வளாகத்தின் உள்ளே தென்பகுதியில் தனது பள்ளி நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த அதே ஊரைச் சார்ந்த பார்ட் டைம் ஆட்டோ ஓட்டுனரான கல்லூரி மாணவர் சந்துரு. விளையாடிக்கொண்டிருந்த விஷ்ணுபரத்திடம், “உங்கள் வீட்டில் இருந்து திருவிழாவுக்கு வரி கொடுக்க வில்லை, அதனால் அய்யாவின் வாகன ஊர்வலத்திற்கு நீ வரக்கூடாது..” எனக் சொன்னதாக கூறப்படுகின்றது. விஷ்னு பரத் தனது நண்பர்கள் இருக்கும் தைரியத்தில் “நீ சும்மா சீன் போடாதே.. தள்ளிப் போ ” என்று சொன்னதால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

ஆத்திரமடைந்த சந்துரு, தான் ஓட்டும் ஆட்டோவின் சாவி கீ செயினில் மாட்டப்பட்டிருந்த பட்டன் கத்தியால் விஷ்ணுபரத்தை சரமாரியாக குத்தியதாக கூறப்படுகின்றது. இதில் பலத்த காயம் அடைந்ததால் ரத்த வெள்ளத்தில் விஷ்ணுபரத் கீழே சாய்ந்தார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து சந்துருவை மடக்கிப்பிடித்தனர். ஆத்திரத்தில் கத்தியால் குத்தி விட்டதாக பதறிய சந்துரு , உயிருக்கு போராடிய விஷ்னு பரத்தை தனது ஆட்டோவில் ஏற்றி கன்னியாகுமரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அதற்குள்ளாக தனது மகன் கத்தியால் குத்தப்பட்ட தகவல் அறிந்து விஷ்ணுபரத்தின் தந்தை கண்ணன் ஆவேசமாக மருத்துவமனைக்கு வந்ததால், அங்கிருந்து ஆட்டோவை எடுத்துக் கொண்டு சந்துரு தப்பி சென்று விட்டதாக கூறப்படுகின்றது.

பள்ளி மாணவன் விஷ்ணு பரத்தை மேல் சிகிச்சைக்காக பெருமாள்புரம் குமாரசாமி மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் , அவரை பரிசோதித்த மருத்துவர்கள், விஷ்ணு பிரசாத் இறந்து விட்டதாக கூறினர். இதையடுத்து விஷ்ணுபரத்தின் உடல் பிணக்கூறாய்வுக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. உறவினர்களிடம் சிக்கினால் நிலைமை விபரீதமாகிவிடும் என்று அஞ்சிய கல்லூரி மாணவர் சந்துரு கூடங்குளம் காவல் நிலையத்தில் தனது கத்தியை ஒப்ப்டைத்து சரணடைந்ததாக போலீசார் தெரிவித்தனர்.


SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

பாய் ஃபிரண்ட் பாவச் செயல்.... கேர்ள் பிரண்ட் Just miss..! AI சேட்டை.. போலீஸ் வேட்டை..!

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies