கவுதமாலாவில் இரவு நேர ஆடல் பாடல் நிகழ்ச்சியின் கூட்ட நெரிசல் சிக்கி 9 பேர் பலி - 20க்கும் மேற்பட்டோர் காயம்..!

0 3227
கவுதமாலாவில் இரவு நேர ஆடல் பாடல் நிகழ்ச்சியின் கூட்ட நெரிசல் சிக்கி 9 பேர் பலி - 20க்கும் மேற்பட்டோர் காயம்..!

கவுதமாலா நாட்டில் இரவுநேர ஆடல் பாடல் நிகழ்ச்சியின் முடிவில் கூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் பலியாகினர்.

தலைநகர் கவுதமாலாவிலிருந்து 200 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள குவாட்ஜால்டிலாகோ பகுதியில் வெளி அரங்கில் ஆடல் பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கானோர் ஒரே நேரத்தில் நிகழ்ச்சி முடிந்து முண்டியடித்துக் கொண்டு கலைந்து செல்ல முயன்றபோது, பயங்கர கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

இதில் 9 பேர் பலியான நிலையில் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments