கர்நாடகாவில் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் விழுந்த கார்.. காருடன் தத்தளித்த ஓட்டுநர் பத்திரமாக மீட்பு..!

0 1504
கர்நாடகாவில் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் விழுந்த கார்.. காருடன் தத்தளித்த ஓட்டுநர் பத்திரமாக மீட்பு..!

கர்நாடக மாநிலம் பெல்காம் மாவட்டத்தில் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் விழுந்த காரை, அதன் ஓட்டுநருடன் அப்பகுதி மக்கள் பத்திரமாக மீட்டனர்.

மகாராஷ்டிராவின் புனேவில் இருந்து வந்த வாடகை கார் ஒன்று, பெல்காம் அருகே வாடிக்கையாளர்களை இறக்கி விட்டு திரும்பியது. சிக்கோடி என்ற பகுதியை கார் கடந்த போது எதிர்பாராவிதமாக கட்டுப்பாட்டை இழந்து துத்கங்கா ஆற்றில் விழுந்தது.

இதைக் கண்ட அப்பகுதி மக்கள், மீட்பு நடவடிக்கையை தொடங்கியபோது, அதன் ஓட்டுநர் காரின் மேல் அமர்ந்து கொண்டார். பின்னர், காரின் பின்பகுதியில் கயிறு கட்டி டிராக்டர் மூலம் பத்திரமாக அவர்கள் மீட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments