தமிழ்நாடு
ஜில்லா விட்டு ஜில்லா வந்த கதைய நீயும் கேளய்யா... அதற்கு ‘NO’ சொன்ன லிவ் இன் காதலி கழுத்திலேயே வெட்டிய 2-வது காதலன்!
Jul 20, 2025 12:59 PM
311
ஜில்லா விட்டு ஜில்லா வந்த கதைய நீயும் கேளய்யா...
18 வயதிலேயே திருமணம்... 4 வயதில் ஒரு குழந்தை... கணவரை விட்டு பிரிந்து காதலனுடன் லிவ் இன் டூ ரிலேஷன்ஷிப்... பாலியல் தொழிலுக்கு வற்புறுத்திய கொடூர காதலன்... அடுத்து நடந்த கொடூரம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...
ஆந்திர மாநிலம் கோனசீமா மாவட்டம், ராஜோலு மண்டலம் மெரகபாலம் கிராமத்தைச் சேர்ந்தவர், 22 வயது ஒலேட்டி புஷ்பா. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நெருங்கிய உறவினருக்கும் இவருக்கும் திருமணம் ஆகி, 4 வயதில் ஆண் குழந்தையும் உள்ளது.
ஆனால், புஷ்பாவுக்கும் அவரது கணவருக்கும் ஏற்பட்டால், இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இந்நிலையில், தனது தாயார் கங்காவுடன் வசித்துவந்த புஷ்பா, வேலை தேடி விஜயவாடாவுக்கு குடி பெயர்ந்துள்ளார்.
அப்போது, கார் மெக்கானிக் ஷேக் ஷம்மி என்பவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. அந்த நட்பு காதலாக மாற ஆரம்பித்தது. இதனைத் தொடர்ந்து, இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர்.
சிறிது காலத்திற்குப் பிறகு, தம்பதியினர் ரசோலுக்குத் திரும்பி, ஒரு வாடகை வீட்டில் லிவிங் இன் ரிலேஷன்ஷிப்பில், ஒன்றாக வாழத் தொடங்கியதாக கூறப்படுகிறது.
ஆனால், கடந்த ஆறு மாதங்களாக, ஷேக் ஷம்மி சரிவர வேலைக்கும் செல்லாமல், குடித்துவிட்டு வந்ததால் இருவருக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
மேலும், குடிக்க பணம் இல்லாததால், காதலன் ஷேக் ஷம்மி, புஷ்பாவை பாலியல் தொழிலில் ஈடுபட வற்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது. அதை அவர் திட்டவட்டமாக மறுத்தார் என்றும் கூறப்படுகிறது.
இதனால், ஷேக் ஷம்மி மிகவும் கோபமடைந்து, கத்தியால் புஷ்பாவின் கழுத்தில் மிகக்கோடூரமாக குத்தியுள்ளார்.
புஷ்பாவின் தாயார் கங்கா மற்றும் சகோதரர் வினய் தடுக்க முயற்சித்துள்ளனர். அவர்களையும் ஷேக் ஷம்மி கொடூரமாக தாக்கிவிட்டு, புஷ்பாவை கத்தியால் மீண்டும் மீண்டும் குத்தியதாகக் கூறப்படுகிறது.
இதனால், புஷ்பா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து, ஷேக் ஷம்மி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். தகவல் கிடைத்தவுடன், இன்ஸ்பெக்டர் நரேஷ் குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, வழக்குப் பதிவு செய்து, விசாரணையைத் தொடங்கி, தலைமறைவான ஷேக் ஷம்மியை தேடி வருகின்றனர்.
புஷ்பாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக ரசோல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு விசாரித்து வருகின்றனர்.
காயமடைந்த கங்கா மற்றும் வினய் ஆகியோர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தற்போது, தலைமறைவாக உள்ள ஷேக் ஷம்மியைத் தேடி வருகின்றனர்.
அவசர அவசரமாக புஷ்பாவிற்கு செய்த திருமணம்... அவசர அவசரமாக கணவரிடமிருந்து பிரிவை உண்டாக்கியது. அதிலிருந்தும் பாடம் கற்றுக்கொள்ளாத புஷ்பாவும் அவரதும் குடும்பத்தினரும் அவசர அவசரமாக 22 வயது மெச்சூரிட்டி இல்லாத இளைனன் ஷேக் ஷம்மியுடம் திருமணம் செய்துவைக்காமலேயே வாழ வைத்திருக்கிறார்கள்.
அவனோ, புஷ்பாவை பணம் சம்பாதிக்கும் வெறும் பொம்மையாக நினைத்திருக்கிறான்.
கட்டிய கணவனுடனும் வாழமுடியாமல், நம்பிப்போன காதலனுடனும் வாழமுடியாமல், 22 வயதிலேயே புஷ்பாவின் கதை முடிந்துவிட்டது, சோகத்திலும் சோகம்!
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu