RECENT NEWS

டிரம்பின் நாடு கடத்தும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு  - சட்டவிரோத குடியேறிகள் அடைக்கப்பட்டுள்ள முகாமுக்கு வெளியே போராட்டம்

இந்தியா

100 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து கோவில் நிலத்தில் புதைப்பு? நடுங்க வைத்த 'தர்மஸ்தலா' திகில்..!

Jul 20, 2025 12:47 PM

570

100 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து கோவில் நிலத்தில் புதைப்பு? நடுங்க வைத்த 'தர்மஸ்தலா' திகில்..!

100 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து கோவில் நிலத்தில் புதைப்பு?

போலீசார் பாதுகாப்போடு கறுப்பு நிற துணியால் முகம் மறைக்கப்பட்டு நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லப்பட்ட இந்த நபர் யார்?...

நாட்டையே உலுக்கிய தர்மஸ்தலா கோவிலின் உறைய வைக்கும் திகில் பின்னணி குறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு..

கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் தர்மஸ்தலாவில் உலக புகழ்பெற்ற மஞ்சுநாத சாமி கோவில் அமைந்துள்ளது.

மலைப்பகுதியில் அமைந்துள்ள இந்த சிவன் கோவிலுக்கு வெளிமாநிலத்தில் இருந்து மட்டுமில்லாமல் வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருவது வழக்கம்.

இந்த கோவிலின் முன்னாள் துப்புரவு ஊழியர் ஒருவர் கடந்த ஜூலை 4-ம் தேதி அதிர்ச்சியூட்டும் புகார் ஒன்றை முன்வைத்தார்.

"1995-ம் ஆண்டிலிருந்து 2014-ம் ஆண்டு வரை, பல பெண்கள் மற்றும் மாணவிகளை கோவில் நிர்வாகத்தினர் பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்ததாகவும், இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யுமாறு தன்னை கோயில் நிர்வாகத்தினர் கட்டாயப்படுத்தியதாகவும் பகீர் கிளப்பினார்.

உடலை புதைக்கவில்லை என்றால், தன்னை கொலை செய்துவிடுவோம் என கோயில் நிர்வாகத்தினர் மிரட்டியதாகவும், அதற்கு பயந்து கொண்டு தானும் 100க்கும் மேற்பட்ட சடலங்களை அங்குள்ள நிலத்தில் புதைத்ததாக வாக்குமூலம் ஒன்றை அளித்துள்ளார்.

அதிலும் பல சிறுமிகளின் உடல்களை சீருடையோடு அடக்கம் செய்திருக்கிறேன், அவர்களது உடல்களில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட காயங்களும், ஆசிட் தழும்புகளும் இருந்தது என்று கோவிலின் முன்னாள் துப்புரவு ஊழியர் தெரிவித்துள்ளார்.

2014 ஆம் ஆண்டு வரை துப்புரவு ஊழியராக வேலை பார்த்த அந்த நபர், அதன் பின் மாயமானது ஏன்? என கேள்வி எழுப்பியதற்கு, 2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், தன்னுடைய குடும்பத்தை சேர்ந்த ஒரு இளம் பெண்ணிற்கே கோவில் நிர்வாகிகள் தரப்பில் இருந்து பாலியல் தொந்தரவு ஏற்பட்டதாகவும், அதனால் குடும்பத்தோடு தலைமறைவதானதாகவும் அந்த நபர் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது தனது மனசாட்சி உறுத்துகிற, காரணத்தால் இதை அனைத்தையும் தெரிவித்துள்ளதாக துப்புரவு ஊழியர் கூறியுள்ளார். அதே நேரத்தில் இதையெல்லாம் சொல்வதால் தனது உயிருக்கு ஆபத்து நேரிடும் என்றும் அவர் கூறியதாக சொல்லப்படுகிறது.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், கோவில் முன்னாள் துப்புரவு ஊழியரை பெல்தங்காடி நீதிமன்றத்திற்கு அழைத்து சென்றனர்.

அங்கு போலீசார் அவரது முகத்தை கறுப்பு நிற துணியால் மறைத்து நீதிமன்றத்திற்குள் அழைத்து சென்றனர்.

நடந்ததை நீதிமன்றத்தில் தெரிவித்த முன்னாள் துப்புரவு ஊழியர், சில எலும்புகூடுகளின் புகைப்படங்களையும் ஆதாரமாக காண்பித்ததாக கூறப்படுகிறது.

இச்சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தட்சிண கன்னடா மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அதிகாரி அருண், 100க்கும் மேற்பட்ட பெண்கள், மாணவிகளை பலாத்காரம் செய்து கொன்று உடலை புதைத்ததாக கூறப்படும் வழக்கில் புகார்தாரர் தற்போது எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை. அவர் கூறும் இடத்தில் குழி தோண்டி உடலை எடுக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான பணி நடைபெற உள்ளதாக தெரிவித்துள்ளார்.

பிணத்தை தோண்டி எடுக்கும் பணி என்பது சாதாரண விஷயம் அல்ல. பிணங்களை தோண்டி எடுக்கும் நாள், நேரம், சட்ட விதிகள் அனைத்தும் விசாரணை அதிகாரியால் தீர்மானிக்கப்படும். இந்த விவகாரத்தில் விசாரணை அதிகாரியின் முடிவே இறுதியானது" என்றும் அவர் கூறினார்.

இந்த நிலையில் பெங்களூருவை சேர்ந்த 60 வயதான சுஜாதா பட் என்பவர் வைத்த குற்றச்சாட்டுகளும் பகீர் கிளப்பியுள்ளது. மணிப்பால் மருத்துவ கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்த தனது மகள் அனன்யா பட், 2003-ம் ஆண்டு தனது நண்பர்களோடு தர்மஸ்தலா கோவிலுக்கு சென்றதாகவும், அங்கு தனது மகள் மர்மமான முறையில் மாயமானதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அனன்யா மாயமானதை அவர்களது நண்பர்கள் தாய் சுஜாதாவிற்கு தெரிவித்த நிலையில், கொல்கத்தாவில் இருந்த சுஜாதா மகளை தேடி தர்மஸ்தலாவிற்கு சென்றுள்ளார்.

கோவிலை சுற்றி உள்ள பல இடங்களில் தேடியும் அனன்யா கிடைக்காத நிலையில், அங்கிருந்த உள்ளூரை சேர்ந்த ஒருவர், இந்த பெண்ணை கோவில் நிர்வாகிகள் அழைத்து செல்வதை பார்த்ததாக சுஜாதாவிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சுஜாதா, உடனே பெல்தங்காடி காவல் நிலையத்தில் நடந்ததை கூறி புகார் அளித்துள்ளார்.

ஆனால் அங்கிருந்த போலீசார், உனது மகள் யாருடனாவது ஓடியிருப்பார் என கூறி புகாரை ஏற்க மறுத்ததாக சொல்லப்படுகிறது.

பின்னர் தர்மஸ்தலாவின் தர்மகர்த்தா டி. வீரேந்திர ஹெக்கடேவை அணுகியதாகவும், ஆனால் அவர் எந்த உதவியும் செய்யவில்லை என்றும் சுஜாதா தெரிவித்துள்ளார்.

அன்றிரவே கோவிலின் வெளியே உட்காந்திருந்த சுஜாதாவிடம் வெள்ளை நிற உடை அணிந்த சில நபர்கள், அனன்யா பற்றி தகவல் கிடைத்துள்ளதாக கூறி கடத்தி சென்று, கோயிலுக்கு அருகிலுள்ள ஒரு இருட்டான அறையில் வைத்து தலையில் கத்தினால் கொன்றுவிடுவோம் என மிரட்டியதாக தெரிவித்துள்ளார்.

பின்னர் அவர்கள் சுஜாதாவின் தலையில் பயங்கரமாக தாக்கியதாகவும், அதில் மூன்று மாதம் கோமாவிற்கு சென்றதாகவும், கண் திறந்து பார்த்தபோது, தான் பெங்களூரு மருத்துவமனையில் இருந்ததாகவும் சுஜாதா தெரிவித்துள்ளார்.

கோவில் முன்னாள் துப்புரவு ஊழியர் சொன்ன தகவலை அறிந்த சுஜாதா, கோவிலில் புதைக்கப்பட்ட பிணங்களில் தனது மகளின் சடலம் இருந்தால், தயவு செய்து என்னிடம் கொடுத்துவிடுங்கள், அதை வைத்து மகளுக்கு இறுதி சடங்கு செய்யவேண்டும் என கண்ணீர் மல்க தட்சிண கன்னடா மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார்.

தர்மஸ்தலா விவகாரம் மாநிலத்தையே உலுக்கிய நிலையில், கர்நாடக முதல்வர் சித்தராமையாவிடம் அது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த கர்நாடக முதல்வர், தர்மஸ்தலா விவகாரத்தில் மாநில உள்துறை அமைச்சகத்துடன் ஆலோசனை நடத்தி சிறப்பு புலனாய்வு குழு அமைப்பது தொடர்பாக முடிவு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.

தர்மஸ்தலா விஷயத்தில் அரசியல் அல்லது வேறு வழியில் நெருக்கடி வந்தாலும், அதற்கு அடிப்பணியாமல், உண்மை நிலையை கண்டறிய என்னென்ன சட்ட நடவடிக்கை எடுக்க முடியுமோ, அது மேற்கொள்ளப்படும்.

இது தொடர்பாக தட்சிண கன்னடா மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் முதல் கட்ட விசாரணை அறிக்கை கேட்டுள்ளேன்’ என்றும் கர்நாடக முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.

பரபரப்பு வாக்குமூலம் கொடுத்த கோவிலின் முன்னாள் துப்புரவு ஊழியர், தற்போது மாயமாகி உள்ளதால், அவர் உயிருக்கு பயந்து தலைமறைவானாரா? அல்லது உண்மைக்கு புறம்பான தகவல்களை தெரிவித்ததால் தலைமறைவானாரரா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

ஒரு பெண்ணுடன் உல்லாசமாக இருந்தால் 5,000 ரூபாய் சம்பளம்!.. Call Boy Job ரெடியா? கரும்பு தின்னக்  கூலி... தினம் தினம் ஜாலி... மாறிய Climax
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies