BIG STORIES
மாதுளை ஜூஸில் தப்பியவர் சாம்பார் சாதத்தில் சிக்கினார் 10 நாள் ஒத்திகை ஸ்கெட்ச்...மனைவியின் கொலைத் திட்டம்
Jul 20, 2025 01:25 AM
359
மாதுளை ஜூஸில் தப்பியவர் சாம்பார் சாதத்தில் சிக்கினார்.. 10 நாள் ஒத்திகை ஸ்கெட்ச்...மனைவியின் கொலைத் திட்டம்
கணவனை கொலை செய்வதற்காக உணவில் சிறிது சிறிதாக விஷம் கலந்து 10 நாட்களாக ஒத்திகை நடத்தி கொலை செய்ததாக மனைவியும் அவரது கள்ளக்காதலனும் கைது செய்யப்பட்ட நிலையில், விஷம் கலந்தது எப்படி என்று மனைவி பேசிய ஆடியோ வெளியாகி உள்ளது
தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள கீரைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ரசூல், தனியார் நிறுவனத்தில் ஓட்டுநராக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகி அம்முபீ என்ற மனைவியும், ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ரசூலுக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் சேலத்தில் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரது ரத்த மாதிரியை மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது அதில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்திருப்பது தெரியவந்தது.
அதிர்ச்சியடைந்த ரசூலுக்கு அவரது மனைவி மீது சந்தேகம் ஏற்படவே தனது உறவுக்கார பெண் மூலமாக மனைவியின் செல்போனில் உள்ள வாட்ஸ்அப் பதிவுகளை ஆய்வு செய்ய கேட்டுக் கொண்டார். அதில், அம்முபி அதேப் பகுதியில் சலூன் நடத்தி வரும் லோகேஸ்வரன் என்பவருடன் வாட்ஸ்அப் உரையாடியிருந்தது தெரிய வந்தது.
அந்தப் பதிவில் நீங்கள் கொடுத்த பூச்சிக்கொல்லி மருந்தை முதலில் மாதுளம் ஜூஸில் கலந்து கொடுத்தேன், அதை கணவர் ரசூல் வேண்டாம் என்று தெரிவித்ததாகவும், பின்பு உணவில் கலந்து கொடுத்ததாகவும் அம்முபி கூறிய அதிர்ச்சி உரையாடல் இருந்தது.
இதனையடுத்து, ரசூல் அளித்த புகாரில் அம்முபி மற்றும் லோகேஸ்வரனை அரூர் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதற்கிடையில், உடல் நிலை மோசமடைந்த ரசூல் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிரிழந்ததால் கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக போலீஸார் மாற்றினர்.
தொடர் விசாரணையில், ரசூல் வீட்டின் அருகில் கடந்த 3 ஆண்டுகளாக வசித்து வந்த லோகேஸ்வரனுக்கும் அம்முபிக்கும் திருமணத்தை மீறிய உறவு ஏற்பட்டது தெரிய வந்தது. ஒரு கட்டத்தில் இருவரும் சேர்ந்து வாழலாம் என்று முடிவெடுத்த நிலையில் அதற்கு ரசூல் இடையூறாக இருப்பதாக கருதி அவரை கொலை செய்ய திட்டமிட்டனர்.
இதற்காக, செடிகளுக்கு அடிக்க பயன்படும் நெடி குறைவாக உள்ள பூச்சிக் கொல்லி மருந்தை லோகேஸ்வரன் வாங்கி வந்து கொடுத்துள்ளார். அந்த மருந்தை ஜூஸில் கலந்து எவ்வாறு கொடுக்க வேண்டும் என்றும் அம்முபிக்கு லோகேஸ்வரன் கொலைத் திட்டம் வகுத்து கொடுத்துள்ளார்.
அதன்படி, மாதுளம் ஜூஸில் விஷமருந்தை கலந்து அம்முபி கொடுத்த ஜூஸை வேண்டாம் என ரசூல் கூறியதால், மதிய உணவாக சமைத்த சாம்பாரில் பூச்சி மருந்தை கலந்து கொடுத்துள்ளார். தான் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது தனது இரு குழந்தைகளுக்கும் உணவை பாசத்துடன் ரசூல் ஊட்டியுள்ளார். குழந்தைகளுக்கு கொடுப்பதை தடுத்தால் தாம் மாட்டிக் கொள்வோம் எனக் கருதி அதனை அம்முபி தடுக்காமல் இருந்துள்ளார்.
உணவை சாப்பிட்டு ரசூல் உயிரிழந்த நிலையில், இரு குழந்தைகளும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu