BIG STORIES
அன்று கெத்து காட்டியவர் இன்று வெத்தான சோகம்... ரெயிலு.. ஜெயிலு.. பெயிலு..! கொள்ளை வழக்கில் கைதான பின்னணி
Jul 20, 2025 01:20 AM
266
அன்று கெத்து காட்டியவர் இன்று வெத்தான சோகம்... ரெயிலு.. ஜெயிலு.. பெயிலு..! கொள்ளை வழக்கில் கைதான பின்னணி
பள்ளியில் படிக்கும் போது ஆசிரியரை மிரட்டிக் கொண்டும், கெத்து காட்டுவதாகவும் சுற்றிய மாணவன் ஒருவன் மூன்றே வருடங்களில் கொள்ளை வழக்கில் சிக்கி ஜெயிலுக்கு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளான்.
கண்டதையும் கையில் சுற்றிக் கொண்டு பிஞ்சிலேயே பழுத்தது போல், ஏறினா ரெயிலு .. இறங்கினா ஜெயிலு.. போட்டா பெயிலுன்னு பஞ்ச் டயலாக் பேசிய இவர் தான், தற்போது கொள்ளை வழக்கில் ஜெயிலுக்கு போக வேனில் ஏறும் தவம் என்கிற பிரதீவ்..!
தேனி மாவட்டம், தேவதானப்பட்டியைச் சேர்ந்தவர் முருகன், இவர் பணம் வைக்கும் ஏஜென்சி நடத்தி வருகிறார். இவரிடம் அதே பகுதியை சேர்ந்த நாகஅர்ஜுன் உட்பட இரண்டு பேர் வேலை பார்த்து வந்தனர்.
இந்நிலையில், கடந்த ஜூன் 13-ஆம் தேதி செம்பட்டியில் இருந்து சின்னாளபட்டியில் உள்ள ஏ.டி.எம்.மில் பணம் வைப்பதற்காக நாக அர்ஜுன், தனது இருசக்கர வாகனத்தில் 29 லட்சம் ரூபாயுடன் சென்றபோது மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று விட்டதாக உரிமையாளர் முருகனுக்கு தகவல் தெரிவித்தார். இதுகுறித்து முருகன் செம்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தார். இந்த புகாரின் பேரில் செம்பட்டி இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் தனிப்படை அமைத்து, அந்தப் பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சி பதிவுகளை ஆய்வு செய்தனர்.
விசாரணையில், தனது நண்பர்கள் சிலருடன் சேர்ந்து நாக அர்ஜூன் 29 லட்சம் ரூபாயை அபேஸ் செய்து விட்டு கொள்ளை போனதாக நாடகம் ஆடியது தெரியவந்தது. இந்த கொள்ளை நாடகம் தொடர்பாக நாக அர்ஜுன், அவரது நண்பர்கள் சுரேந்தர், முகமது இத்ரீஸ், கார்த்தீஸ்வரன், தவம் என்கிற ப்ரீத்திவ், மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களில் கைது செய்யப்பட்ட தவம் என்ற ப்ரீத்திவ் என்பவர் தேவதானப்பட்டி பள்ளியில் படித்தபோது, பள்ளி வளாகத்தில் சக மாணவர்கள் முன்னிலையில், ஏறுனா ரயிலு, இறங்கினால் ஜெயிலு, போட்டால் பெயிலு எனவும், தவம் இருக்கும் வரை, ஒன்றும் செய்ய முடியாது என ஒருமையில் பேசி, பள்ளி ஆசிரியரை மிரட்டி கெத்து காட்டியவர் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது
படிக்கின்ற வயதில் ஒழுக்கமாக படிக்காமல் கெத்துக்காட்டுவதாக நினைத்து எகத்தாளமாக சுற்றிய தவம், தற்போது கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்டு வாழ்க்கையில் பெயிலாகி , ஜெயிலுக்கு சென்றுள்ளதாக போலீசார் சுட்டிக்காட்டுகின்றனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu