முகப்பு
காவல் நிலையத்தில் ஜாமின் கையெழுத்திட்டு வந்த இளைஞர் வெட்டிப் படுகொலை..!
Jul 15, 2025 12:53 PM
73
காவல் நிலையத்தில் ஜாமின் கையெழுத்திட்டு வந்த இளைஞர் வெட்டிப் படுகொலை
சேலம் மாவட்டம் அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் ஜாமின் கையெழுத்திட்ட பிறகு அருகேயுள்ள ஹோட்டலில் மனைவியுடன் உணவருந்திக் கொண்டிருந்த மதன் என்பவர் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.
தூத்துக்குடியைச் சேர்ந்த மதனும், அவரது கூட்டாளிகள் 5 பேரும் கடந்த ஏப்ரல் மாதம் கப்பல் மாலுமி மரடோனா என்பவரை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த வழக்கில் நிபந்தனை ஜாமீன் பெற்ற மதன் கடந்த 10-ம் தேதி முதல் அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வந்துள்ளார்.
இதையறிந்த சிலர் சேலத்தில் தங்கி மதனை பின்தொடர்ந்து வெட்டிக் கொலை செய்ததாக கூறப்படுகிறது.
இதனிடையே, மதன் கொலை செய்யப்பட்ட போது ஹோட்டலில் இருந்த அவரது மனைவி மோனிஷா உயிருக்கு பயந்து அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தார்.
மாலுமி மரடோனாவின் தந்தை மீது சந்தேகம் இருப்பதாகவும், தனது மகனை கொலை செய்ததைப் போல் மதனையும் கொலை செய்வேன் என அவர் மிரட்டி வந்ததாகவும் போலீசாரிடம் மோனிஷா தெரிவித்துள்ளனர்.
கொலையாளிகளை பிடிக்க காவல்துறை 4 தனிப்படைகளை அமைத்துள்ள நிலையில், 6 பேர் கொண்ட கும்பல் மதனை கொலை செய்து விட்டு 2 பைக்குகளில் தப்பிச் சென்ற சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu