மாமியார் கழுத்தை நெறித்துக் கொலை செய்த மருமகள்
Aug 11, 2025
குறைந்தது தங்கத்தின் விலை - எவ்வளவு தெரியுமா..?
Aug 11, 2025
இந்தியா
ரூ.15,000 கோடி சொத்துக்களை இழக்கப்போகும் சூப்பர் ஸ்டார் நடிகர்... அரண்மனை அரசுக்கு செல்கிறது ?
Jul 08, 2025 05:34 AM
165
ரூ.15,000 கோடி சொத்துக்களை இழக்கப்போகும் சூப்பர் ஸ்டார் நடிகர்... அரண்மனை அரசுக்கு செல்கிறது ?
பாலிவுட்டின் பிரபல நடிகரான சைஃப் அலிகான் தான் வாழ்ந்த ராஜ அரண்மனை உட்பட 15,000 கோடி ரூபாய் சொத்துக்களை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. போபால் அரசின் சொத்துக்களை சைஃப் அலி கான் பெற்றது எப்படி? என்ன நடந்தது விரிவாகப் பார்ப்போம்.
பாலிவுட்டின் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் சைஃப் அலிகான். 1993ம் ஆண்டு பாலிவுட்டில் அறிமுகமான சைஃப், நூற்றுக்கணக்கான படங்களில் நடித்து பெரும் புகழ் பெற்றுள்ளார். 'விக்ரம் வேதா', 'ரேஸ்', 'தேவரா', 'ஆதிபுருஷ்' உள்ளிட்ட படங்களில் இவர் நடித்துள்ளார். ஆனால், இதையெல்லாம் தாண்டி சைஃப் அலிகான், பட்டோடி மற்றும் போபால் அரச குடும்பத்தின் வாரிசு என்ற தகவல் பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
மத்திய பிரதேச தலைநகரான போபால் நவாப் குடும்பத்தின் வாரிசுகளில் ஒருவர் மன்சூர் அலிகான் பட்டோடி. இவர் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனாக இருந்தவர். இவருக்கும், பிரபல பாலிவுட் நடிகை சர்மிளா தாகூருக்கும் பிறந்தவர் தான் நடிகர் சைஃப் அலிகான்.
பட்டோடி குடும்பத்துக்கு போபாலில் அரண்மனை, கட்டிடங்கள், நிலங்கள் என 15000 கோடி ரூபாய் அளவுக்கு சொத்துக்கள் இருக்கின்றன. நடிகர் சைஃப் அலிகான் தனது குழந்தை பருவத்தை அதிகமாக கழித்தது இந்த போபால் அரண்மனையில் தான். தற்போது அந்த அரண்மனை உட்பட பல கோடி ரூபாய் சொத்துக்களை இழக்கும் நிலை அவருக்கு ஏற்பட்டுள்ளது.
போபாலின் கடைசி நவாப்பாக இருந்தவர் ஹமீதுல்லா கான். அவருக்கு அபிதா பேகம், சஜிதா பேகம், ரபியா பேகம் என மூன்று மகள்கள் இருந்தனர். இதில் மூத்த மகளான அபிதா பேகம், இந்தியா பாகிஸ்தான் பிரிவினையை அடுத்து 1950-ல் பாகிஸ்தானுக்கு குடிபெயர்ந்தார். இதனால் அவரின் இந்திய குடியுரிமையும் பறிபோனது. இதையடுத்து நவாப்பின் இரண்டாவது மகள் சஜிதா பேகம், இந்தியாவிலே தங்கி கிரிக்கெட் வீரர் இப்திகார் அலி கான் பட்டோடியை திருமணம் செய்துகொண்டார். எனவே அபிதா இல்லாததால், சஜிதா பேகம் போபால் நவாப் குடும்பத்தின் சட்டப்பூர்வ வாரிசானார்.
அதைத்தொடர்ந்து இந்த சொத்துகள், சாஜிதாவின் மகனான இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மன்சூர் அலி கானுக்கும், பின்னர் அவரது மனைவி ஷர்மிளா தாகூர், வாரிசுகளான சைஃப் அலி கான் மற்றும் அவரின் சகோதரிகள் வசமும் வந்தன.இந்நிலையில், நவாப் அரசு சொத்துகள் நியாயமற்ற முறையில் பிரித்து அளிக்கப்பட்டுள்ளதாக, போபால் மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த 1999-ஆம் ஆண்டு நவாப் ஹமீதுல்லா கானின் அண்ணன் வாரிசு, பேகம் சுரையா ரஷீத் வழக்கு தொடுத்தார். ஆனால், இந்த வழக்கில் சைஃப் அலி கான், அவரது தாயார் ஷார்மிளா தாகூர், சகோதரிகளுக்கு ஆதரவாக விசாரணை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
அதைத்தொடர்ந்து, இந்தியா மற்றும் பாகிஸ்தான் பிரிவினையின் போது பாகிஸ்தானுக்கு சென்றவர்களின் சொத்துகளை எதிரி சொத்துக்களாக கருதி அரசாங்கம் கையகப்படுத்த முடியும் என்றும், எதிரி சொத்து என அறிவிக்கப்பட்டால் அந்த சொத்துக்கள் மத்திய அரசுக்கு செல்லும் எனவும் அறிவிக்கப்பட்டது.இந்த அடிப்படையில், அபிதா சுல்தான் பாகிஸ்தான் குடியேறியதை காரணம் காட்டி, போபால் அரச குடும்ப சொத்துக்கள் அனைத்தையும் எதிரி சொத்துகளாக கடந்த 2014ல் அறிவித்த மத்திய அரசு, இதில் சஜிதா சுல்தான் சொத்துகளையும் கொண்டு வர நினைத்தது.
எனவே இதனை எதிர்த்து 2015ல் மத்திய பிரதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார் சைஃப் அலிகான். இந்த மனுவை ஏற்றுக்கொண்டு மத்திய அரசுக்கு தடை விதித்த நீதிமன்றம், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அதே மனுவை தள்ளுபடியும் செய்தது. காரணம், 2016ல் மத்திய அரசு பிறப்பித்த அரசாணையில் போபாலில் உள்ள நவாப் சொத்துகள் மீது வாரிசுகள் உரிமை கொண்டாட முடியாது என்று அறிவித்தது.
இந்த அரசாணை அடிப்படையில், நவாப் சொத்துக்களை கைப்பற்ற மத்திய அரசுக்கு விதித்திருந்த தடையை நீக்கிய நீதிமன்றம், சைஃப் அலிகான் வேண்டும் என்றால், 30 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட தீர்ப்பாயத்தில் மேல் முறையீடு செய்து நிவாரணம் பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவித்தது.
நீதிமன்றம் கெடு விதித்த அந்த 30 நாட்கள் முடிந்த நிலையில், நடிகர் சைஃப் அலிகான் 15000 கோடி ரூபாய் சொத்துகளுக்கு உரிமை கோரி தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை, மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இதனால், நடிகர் சைஃப் அலிகானின் சொத்துக்களை அரசாங்கம் எடுத்துக்கொள்ள அதிக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது..
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu