BIG STORIES
அம்மாகிட்ட கோவிச்சுக்கிட்டு நண்பர்களை தேடிய விபரீத இன்ஸ்டா சிறுமி..!சென்னையில் நடந்தது என்ன ?
Jun 02, 2025 06:36 AM
301
அம்மாகிட்ட கோவிச்சுக்கிட்டு நண்பர்களை தேடிய விபரீத இன்ஸ்டா சிறுமி..!சென்னையில் நடந்தது என்ன ?
திருவண்ணாமலை அருகே முப்பொழுதும் இன்ஸ்டாகிராமில் மூழ்கி கிடந்த சிறுமியை தாய் கண்டித்ததால், வீட்டை விட்டு வெளியேறி நண்பர்களை தேடிச் சென்று விபரீதத்தில் சிக்கிய சிறுமி போலீசாரால் மீட்கப்பட்டார்
திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த 17 வயதான சிறுமி ஒருவர் நர்சிங் படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு வீட்டில் இருந்து வந்துள்ளார். அவர் அடிக்கடி ஸ்மார்ட் போனை கையில் வைத்துக் கொண்டு இன்ஸ்டாகிராமில் மூழ்கி கிடந்ததாக கூறப்படுகிறது.
இதனை அறிந்த அந்த சிறுமியின் தாய் சிறுமியிடம் இருந்து மொபைலைப் பறித்து வைத்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த அந்த சிறுமி கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தனது செல்போனை எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறி கேரளா, ஆந்திரா என இன்ஸ்டா நண்பர்களை தேடிப்பிடித்து ஜாலியாக ஊர் சுற்றி வந்துள்ளார்.
அந்த வரிசையில் சென்னையை சேர்ந்த சாய் என்ற இளைஞன் இன்ஸ்டாவில் அறிமுகமாகி முகத்தை பார்க்காமலேயே சிறுமியை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் காதலன் சாயை பார்ப்பதற்காக சிறுமி, ரயில் மூலமாக இரவு நேரத்தில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்துள்ளார்.
'காதல் கோட்டை' சினிமாவில் வருவது போல காதலன் தன்னை ஏற்றுக்கொள்வார் என்று கனவில் காத்திருந்த அந்த சிறுமியை நேரில் பார்த்த சாய் அதிர்ச்சியடைந்தார்.
"நீ கருப்பா இருக்க, உன்னை எனக்கு பிடிக்கல" என கூறி சிறுமியை ரயில் நிலையத்திலேயே தவிக்கவிட்டுச் சென்றதாக கூறப்படுகிறது.
தனது இன்ஸ்டா கோட்டை சரிந்த விரக்தியில்
நள்ளிரவு 1.30 மணி அளவில் ரயில் நிலையத்திற்கு வெளியே சுற்றித் திரிந்த சிறுமியை, கருப்பு நிற ஆக்டிவா ஸ்கூட்டரில் வந்த அதே பகுதியைச் சேர்ந்த புள்ளிங்கோ பாய்ஸ் இருவர் பார்த்துள்ளனர்
அந்த இரு இளைஞர்களும் சிறுமியை பைக்கில் அழைத்து சென்றுள்ளனர். கொத்தவால்சாவடி பகுதியில் உள்ள அறநிலையத்துறைக்கு சொந்தமான பாழடைந்த கட்டடத்திற்குள் இருவரும் சிறுமியை அழைத்துச் சென்றுள்ளனர்.
இரவு நேரத்தில் அந்த பகுதிக்குள் யாராவது சென்றால் அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என காவல் துறையினர் ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில், இதனை கண்ட அப்பகுதியை சேர்ந்த ஒருவர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
உடனே அந்த பகுதிக்கு விரைந்த கொத்தவால்சாவடி போலீசார் சிறுமியை பத்திரமாக மீட்டனர். மேலும் நள்ளிரவில் சிறுமியை அழைத்து சென்ற இருவரையும் போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் சென்ற பைக்கையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
சிறுமியிடம் நடத்திய விசாரணையில் அந்த அண்ணா தான் தன்னை கூட்டிச் சென்றதாக தெரிவித்துள்ளார். மேலும் சிறுமியை பெண்கள் காப்பகத்தில் ஒப்படைத்த போலீசார் சிறுமியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். போலீசார் விரைந்து துரிதமாக செயல்பட்டதால் கூட்டு பாலியல் வன்கொடுமை நிகழாமல் தடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
பொழுதுபோக்கிற்காக பயன்படுத்த வேண்டிய சமூக வலைதளங்களில் முழு நேரமும் மூழ்கிக் கிடந்தால் வாழ்க்கை கெட்டுப்போகும் என்று எச்சரிக்கும் காவல்துறையினர் இன்ஸ்டா பழக்கத்தை நம்பி சிறுமிகள் வீட்டை விட்டு வெளியேறுவது சமீப காலமாக அதிகரித்து வரும் நிலையில் இந்த சம்பவம் ஒரு எச்சரிக்கை பாடம் என்கின்றனர்.
பெற்றோர்கள், ஸ்மார்ட் போன் பயன்படுத்தும் தங்கள் வீட்டு பிள்ளைகளை கண்காணிக்க வேண்டும், இல்லையென்றால் அவர்கள் தவறான பாதைக்கு செல்ல நேரிடும் எனவும் அறிவுறுத்துகின்றனர்
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu