BIG STORIES
நீ குலதெய்வம் சாமி... கைக் குழந்தையுடன் சென்று திருமணத்தை நிறுத்திய பெண்..! சினிமாவை மிஞ்சிய கிளைமாக்ஸ்
May 29, 2025 01:23 AM
708
நீ குலதெய்வம் சாமி... கைக் குழந்தையுடன் சென்று திருமணத்தை நிறுத்திய பெண்..! சினிமாவை மிஞ்சிய கிளைமாக்ஸ்
மதுரையில் ஐடி நிறுவன ஊழியரின் திருமணத்தை பச்சிளங்குழந்தையுடன் வந்து பெண் ஒருவர் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை மகாலெட்சுமி நகர் பகுதியை சேர்ந்த ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் பொறியாளரான பாலசந்தர் என்பவருக்கும் தேனியை சேர்ந்த பொறியியல் பட்டதாரி பெண்ணுக்கும் இரு வீட்டார் ஏற்பாட்டில் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து திருமண பத்திரிக்கை அடித்து இருவீட்டாருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு 28 ஆம் தேதி காலை திருமணம் நடைபெறுவதற்கான தடல்புடலாக ஏற்பாடுகள் மண்டபத்தில் நடைபெற்றுவந்தன.
இரவு உணவு முடிந்து அனைவரும் மண்டபத்தில் காத்திருந்தனர். காலையில் திருமணம் நடைபெறுவதற்காக சமையல், மாலைகள் ஏற்பாடு என மண்டபமே விழாக்கோலத்துடன் காணப்பட்டது.
நள்ளிரவு 12 மணியளவில் திடிரென மதுரை சூர்யாநகர் பகுதியை சேர்ந்த உதயா என்ற தனியார் பள்ளி ஆசிரியை கைக்குழந்தையுடன் அழுதபடி மண்டபத்திற்கு நேரடியாக வந்தார்.
திருமண மாப்பிள்ளை பாலச்சந்திரன் தன்னை காதலிப்பதாக கூறி தாலி கட்டி தன்னுடன் வாழ்ந்து வந்ததாக புகார் கூறிய அவர், மாப்பிள்ளை பாலாவுக்கும் தனக்கும் குழந்தை பிறந்து சில நாட்களே ஆகிறது என்றும் இது தான் அந்த குழந்தை எனவும் கூறியுள்ளார்.
ஆசிரியை உதயா, மாப்பிள்ளை பாலச்சந்திரன் மீது கூறிய குற்றச்சாட்டை கேட்டு பெண்விட்டார் அதிர்ச்சி அடைந்தனர்.
பெண் வீட்டாரிடம் பேசிய பட்டதாரி பெண் உதயா , தான் ஏற்கனவே திருமணமாகி கணவரை பிரிந்து வாழ்ந்த நிலையில் 2021 ஆம் ஆண்டு ஜிம்மிற்கு வந்தபோது பாலசந்திரனுடன் பழகி காதலித்ததாகவும் தெரிவித்தார்.
விவாகரத்து வழக்கு முடிவடைந்த நிலையில் தன்னை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என கூறியபோது வீட்டில் வைத்தே தனக்கு தாலி கட்டியதாகவும், ஊரறிய திருமணம் செய்ய தன் பெற்றோர் 25 பவுன் நகை கேட்பார்கள் என்று கூறி தன்னுடன் குடும்பம் நடத்தியதாகவும், அதன் பலனாக கர்ப்பமான நிலையில் தன்னுடைய கர்ப்பத்தை கலைக்குமாறு பாலச்சந்திரன் கூறியதாகவும் உதயா தெரிவித்தார்.
இதனை மறுத்து தான் கடந்த 7 ஆம் தேதி புதூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் குழந்தை பெற்றபோது தன்னுடைய குழந்தை என கூறி பாலச்சந்திரன் கையெழுத்து போட்டு குழந்தையை வாங்கிக் கொண்டு சென்றதாகவும், இப்போது இதனை மறைத்து வேறு பெண்ணை திருமணம் செய்ய முயல்வதாக கண்ணீர் மல்க புகார் தெரிவித்தார்
தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து கதறி அழுத பெண் வீட்டார், சரியான நேரத்தில் உண்மை தெரியவந்ததால், ஆசிரியை உதயாவை அழைத்து வந்த வழக்கறிஞர்களை பார்த்து, எங்கள் குலதெய்வம் தான் உங்களை அனுப்பி வைத்து என் மகளை காப்பாற்றி இருக்கிறது, திருமணம் செய்து வைத்திருந்தால் என் மகளும் இந்த பெண் போல குழந்தையோடு கஷ்டப்படும் நிலை ஏற்பட்டிருக்கும் மிக்க நன்றி என கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.
தயார் செய்து வைத்த உணவை கூட உண்ணாமல் அப்படியே மண்டபத்திலிருந்து அவசர அவசரமாக கண்ணீருடன் வெளியேறி பெண்விட்டார் ஊருக்கு புறப்பட்டனர்.
இதனையடுத்து காவல்துறை உதவி எண்ணுக்கு புகார் அளிக்கப்பட்ட நிலையில் பாலச்சந்திரனை காவல்துறையினர் அழைத்துசென்று மதுரை தல்லாகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தியபோது உதயாவோடு வாழ்வதற்கு பாலச்சந்திரன் சம்மதம் தெரிவித்ததாக உதயா தரப்பு வழக்கறிஞர் செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்தார்.
திருமணத்திற்காக நட்டு வைத்த வாழை மரம் காற்றில் அசைந்தபடி இருக்க மணமகளுக்காக வைக்கப்பட்டிருந்த பூக்கள் மனம் வீச உணவு சமைப்பதற்காக வைத்திருக்கக்கூடிய பாத்திரங்கள் அப்படியே விட்டு செல்லப்பட்டு தோசை சுட வைத்து இருந்த மாவெல்லாம் வீணாகி ஒட்டுமொத்தமாக திருமண மண்டபமே சோகமயமாக காட்சியளித்தது
திருமண மண்டபத்திற்கு வருகை தந்த உறவினர்களிடம் உடல் நலக்குறைவால் திடீரென திருமணம் நின்று விட்டதாக கூறி மண்டபம் தரப்பினர் சொல்லி அனுப்பி வைத்த அதனைக் கேட்ட திருமணத்திற்கு வந்தவர்கள் செய்வதறியாது சோகத்துடன் சென்றனர்
முன்னதாக காவல் நிலையத்திற்கு வந்த உதயா பாலச்சந்திரனுக்கு போன் செய்து அழைத்தபோது பதட்டத்தில் பேசிய பாலச்சந்திரனின் ஆடியோ அவரை போலீசாரிடம் வசமாக சிக்கவைத்ததாக போலீசார் தெரிவித்தனர்.
திருமணத்திற்காக காத்திருந்த பட்டதாரி மணப்பெண்ணின் மனம் சொல்ல முடியாத வேதனைக்கு ஆளாகி தவித்தது என்றாலும் கூட திருமணத்திற்கு முன்பு இது போன்ற குற்றச்சாட்டு தெரியவந்துள்ளதால் பெரிய அபாயத்திலிருந்து தப்பித்ததாக மனஆறுதலோடு புறப்பட்டு சென்றனர்
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu