BIG STORIES
மட்டன் குழம்பில் கிடந்த 'தேரை'.. வாந்தி எடுத்த வாடிக்கையாளர்கள்.. உணவகத்தை மூடிய அதிகாரிகள்
May 05, 2025 07:17 AM
1149
மட்டன் குழம்பில் கிடந்த 'தேரை'.. வாந்தி எடுத்த வாடிக்கையாளர்கள்.. உணவகத்தை மூடிய அதிகாரிகள்
சென்னை பூந்தமல்லி நாவலடி கொங்குநாடு உணவகத்தில் பரிமாறப்பட்ட மட்டன் குழம்பில் இறந்து போன தேரை இருந்ததாகப் புகார் எழுந்த நிலையில், உணவகத்தை அதிகாரிகள் தற்காலிகமாக மூடி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பூந்தமல்லி நகராட்சி அலுவலகம் அருகே இயங்கி வரும் நாவலடி கொங்குநாடு உணவகத்துக்கு சனிக்கிழமை மதியம் சென்ற ஒரு தம்பதி, பிரியாணி மற்றும் அசைவு உணவு ஆர்டர் செய்து சாப்பிட்டுக் கொண்டு இருந்தனர்.
சாப்பாட்டின் இடையே ஊழியர்கள் கொண்டு வந்து ஊற்றிய மட்டன் குழம்பில், இறந்த நிலையில் முழு தேரை ஒன்று இருந்ததாகக் கூறப்படுகிறது. அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர் உணவக நிர்வாகத்தினரிடம் கேள்வி எழுப்பி வாக்குவாதம் செய்துள்ளார்.
உணவகத்தைத் தாங்கள் தூய்மையாகப் பராமரிப்பதாகக் கூறி, பாதிக்கப்பட்ட வாடிக்கையாளரை அவர்கள் சமையலறைக்கும் அழைத்துச் சென்று காண்பித்ததாகக் கூறப்படுகிறது.
இதற்குள் மட்டன் குழம்பில் தேரை கிடந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி, உணவுப் பாதுகாப்புத்துறைக்கும் புகார்கள் சென்ற நிலையில், விரைந்து சென்ற அதிகாரிகள், உணவு மாதிரிகளை பரிசோதனைக்காக எடுத்துக் கொண்டு, நாவலடி உணவகத்தைத் தற்காலிகமாக மூடிச் சென்றுள்ளனர்.
இது தொடர்பாக உணவக நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டபோது, தாங்கள் சமையல் கூடத்தை சுத்தமாகப் பராமரிப்பதோடு, கவனமாகவே சமையல் செய்வதாகவும் தெரிவித்தனர்.
மட்டன் குழம்பு சமைத்த பாத்திரத்தில் தேரை இருந்திருக்க வாய்ப்பில்லை என்றும் பரிமாறுவதற்காக அதிலிருந்து சிறிய பாத்திரத்துக்கு மாற்றும்போது, அருகிலிருந்த வாழை இலைக் கட்டில் இருந்து வந்து விழுந்திருக்கலாம் என்றும் அவர்கள் கூறினர்.
இதனிடையே திடீரென உணவகம் மூடப்பட்டதால், அங்கு சாப்பிடச் சென்ற வாடிக்கையாளர்கள் பாதியிலேயே திரும்பிச் சென்றனர். உணவகத்தில் தனியார் நிகழ்ச்சி ஒன்று நடைபெறவிருந்த நிலையில் அதுவும் ரத்து செய்யப்பட்டது.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu