முகப்பு
வைகை ஆற்றில் கழிவுகள் கலப்பதை தடுக்க என்ன வழி? உயர்நீதிமன்ற கிளை கேள்வி
Mar 12, 2025 08:41 AM
49
வைகை ஆற்றில் கழிவுகள் கலப்பதை தடுக்க என்ன வழி? உயர்நீதிமன்ற கிளை கேள்வி
ஆறுகளில் மண் அள்ளுவதில் மட்டுமே பொதுப்பணித்துறையினர் கவனம் செலுத்துவதாக உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிருப்தி தெரிவித்துள்ளது.
295 கிலோ மீட்டர் பயணிக்கும் வைகை ஆற்றில் கழிவு நீர் கலப்பது, குப்பைகள் கொட்டுவது தொடர்பாக, தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வரும் மதுரை அமர்வு நீதிபதிகள், நீர்நிலை மக்களுக்கான சொத்து, இதில் அரசியல் பார்க்க வேண்டாம் என்று கூறினர்.
பொதுப்பணித்துறையினர், ஆறுகளை பாதுகாத்து, பராமரிக்க தவறி விட்டதாக விமர்சித்த அவர்கள், வைகை ஆற்றின் தற்போதைய நிலை, கழிவுகள் கலப்பதைத் தடுக்க என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது? என்பது குறித்து 5 மாவட்ட உள்ளாட்சி அமைப்புகள் தனித்தனியே பதில் மனுக்களைத் தாக்கல் செய்யுமாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu