''சூடானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க விமானப்படையின் இரு விமானங்கள், ஒரு கப்பல் தயார் நிலையில் உள்ளது..'' - வெளியுறவுத்துறை அமைச்சகம்..!

0 1117

சூடானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க விமானப்படையின் இரு விமானங்கள் மற்றும் ஒரு கப்பல் தயார் நிலையில் உள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ராணுவத்தினருக்கும், துணை ராணுவத்தினருக்கும் இடையே மோதல் நடைபெறும் சூடானில் உள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதன்படி, மீட்பு பணிக்காக சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் விமானப்படையின் இரு சி-130ஜே ரக விமானங்களும், சூடான் துறைமுகத்தில் ஐ.என்.எஸ். சுமேதா கப்பலும் நிறுத்தப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும், மீட்பு தொடர்பாக ஐ.நா.வுடனும், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், எகிப்து, அமெரிக்காவுடனும், இந்திய தூதரகம் தொடர்பில் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments