வாஷிங்டன் மாநிலத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து.. 19 ஆயிரம் லிட்டர் டீசல் தரையில் கொட்டியது..!

0 1605

அமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டதால் 19 ஆயிரம் லிட்டர் டீசல் தரையில் கொட்டியது.

அனகார்டெஸ் அருகே உள்ள ஸ்காகிட் கவுண்டியில் நள்ளிரவில் சரக்கு ரயில் சென்றுகொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

டீசல் நிலப்பரப்பில் கொட்டியநிலையில், நீர் அல்லது வன விலங்குகளின் பாதிப்புகள் குறித்த எந்த அறிகுறியும் தற்போது இல்லை என வாஷிங்டன் மாநில சூழலியல் துறை தெரிவித்துள்ளது.

விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments