தொழிலதிபர் கடத்தல் வழக்கு - சிபிஐ-க்கு மாற்ற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..!

சென்னையில், தொழிலதிபரை கடத்தி சிறைவைத்து ஐந்தரை கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அபகரித்ததாக காவல் உதவி ஆய்வாளர் உள்ளிட்ட போலீசாருக்கு எதிரான வழக்கை சிபிஐ-க்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அயப்பாக்கத்தைச் சேர்ந்த ராஜேஷிடம் இருந்து சொத்துக்களை அபகரித்ததாக திருமங்கலம் காவல் உதவி ஆய்வாளர் சிவக்குமார் உள்ளிட்டோர் மீது சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிந்தனர்.
இதுதொடர்பான வழக்கை சிபிஐ-க்கு மாற்றக்கோரி ராஜேஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி, காவல்துறையினர் அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ளதாக கூறி, வழக்கை ரத்து செய்யக் கோரிய மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இந்த வழக்கில் மாநில போலீசார், உயரதிகாரிகள் சம்பந்தப்பட்டுள்ளதால் வழக்கின் விசாரணையை சிபிஐ-க்கு மாற்றி உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு தொடர்பான ஆவணங்களை உடனடியாக சிபிஐ வசம் ஒப்படைக்கும்படி உத்தரவிட்டார்.
Comments