வரதட்சணை கொடுமை: இளம்பெண் விஷமருந்தி தற்கொலை.. காவல்துறை தடுப்பை மீறி பெண்ணின் சடலம் சிசுவுடன் கணவர் வீட்டு முன் புதைத்த உறவினர்கள்!

0 2459

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் பெண்ணின் உடலை  சிசுவுடன் சேர்த்து கணவரின் வீடு முன்பாக பெண்ணின் உறவினர்கள் புதைத்தனர்.

விலாப்பட்டி மேட்டுக்குளம் பகுதியை சேர்ந்தவர் அரவிந்தன், இவருக்கும் சவேரியார் பட்டினத்தைச் சேர்ந்த நாகேஸ்வரிக்கும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திருமணம் நடைபெற்றுள்ளது.

ஏற்கனவே 15 சவரன் நகை வரதட்சணையாக கொடுத்து நாகேஸ்வரியை திருமணம் செய்து வைத்த நிலையில் மேலும் மேலும் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக கூறப்படும் நிலையில் கடந்த எட்டு மாதங்களில் இரண்டு மூன்று முறை கணவனோடு  சண்டை போட்டுக் கொண்டு நாகேஸ்வரி தாயார் வீட்டிற்கு வருவதும் பின்னர் கணவனே சமரசம் செய்து நாகேஸ்வரியை அழைத்து செல்வதுமாக இருந்து வந்துள்ளது.

நாகேஸ்வரி ஏழு மாத கர்ப்பமாக உள்ள நிலையில் கணவன் வீட்டில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டதாக நாகேஸ்வரியின் கணவன் அரவிந்தன் நாகேஸ்வரியின் உறவினர்களுக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். மேலும் நாகேஸ்வரியை கீரனூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து அன்னவாசல் காவல் நிலையத்தில் புகார் அளித்த நாகேஸ்வரி உறவினர்கள் மருத்துவமனைக்கு சென்று உடலை பெற்று,  கணவர் மற்றும் மாமானார் மாமியாரை கைது செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து நாகேஸ்வரியின் சடலத்தை கணவரின் வீட்டு முன்பாக புதைக்க முயன்ற போது போலீசார் தடுத்தனர். அதனையும் மீறி போலீசார் முன்னிலையிலேயே தாய் மற்றும சிசுவின் சடலத்தை கணவன் இல்லம் முன்பாக  புதைத்தனர். இதனால் அந்த பகுதியில் பதட்டம் நிலவியது. தற்போது  கணவர் அரவிந்தனை போலீசார் அழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments