மத்திய, மேற்கு அமெரிக்காவைப் புரட்டிப் போட்ட பெரும் புயல்.. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்வு!

0 1115

மத்திய அமெரிக்காவில் தாக்கிய புயல் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய மேற்குப் பகுதியில் வீசிய சூறாவளியால் 7 மாகாணங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.

புயல் காரணமாக அலபாமா, இல்லினாய்ஸ், மிசிசிப்பி மற்றும் லிட்டில் ராக் பகுதியில் இடி மின்னலுடன் கடும் மழை கொட்டித் தீர்த்தது.

மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் ஆயிரக்கணக்காண மக்கள் தவிப்புக்கு ஆளாகி உள்ளனர். இல்லினாய்ஸின் பெல்விடேரில் வீசிய சூறாவளி அப்பல்லோ தியேட்டரின் கூரையை விசிறியடித்ததில் ஒருவர் உயிரிழந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments