தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு இல்லாத மாவட்டங்களின் எண்ணிக்கை 31 ஆக அதிகரிப்பு

தமிழ்நாட்டில், புதிதாக 1,127 பேருக்கு கொரோனா பெருந்தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
கொரோனா பாதிப்பிலிருந்து, ஒரே நாளில் 1,202 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். பெருந்தொற்று பாதிப்பால் 14 பேர் உயிரிழந்தனர். கொரோனா உயிரிழப்பு இல்லாத மாவட்டங்களின் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்து உள்ளது.
சென்னையில் 338 பேருக்கு, புதிதாக, கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. ராமநாதபுரம், முதன்முறையாக கொரோனா இல்லாத மாவட்டமாக மாறியது. பெரம்பலூர் மாவட்டத்தில் தொடர்ந்து 2- வது நாளாக கொரோனாவுக்கு ஒருவர் கூட பாதிக்கப்படவில்லை.
12 மாவட்டங்களில், ஒற்றை இலக்கத்தில் வைரஸ் தொற்று பாதிப்பு பதிவாகி இருந்தது. தமிழகம் முழுவதும் 9 ஆயிரத்து 692 பேர், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Comments