BIG STORIES
தந்தை பலியான அதே நாளில்.. தாயும் விபத்தில் உயிரிழப்பு.. கதறித் துடித்த பள்ளி மாணவர்..! அரசு பெண் அதிகாரியின் வாகனம் மோதியது
May 20, 2025 02:15 AM
397
தாராபுரம் அருகே மகனுக்கு பள்ளிக்கட்டணம் செலுத்தி விட்டு இரு சக்கர வாகனத்தில் திரும்பிய தாய் , கார் மோதி பலியானார். ஏற்கனவே தந்தையை விபத்தில் பறிகொடுத்த மாணவன், அதே நாளில் தாயையும் பறிகொடுத்து கதறிய சோகப் பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு..
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே ரங்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் நந்தகுமார். இவரது மனைவி கனகமணி இவர்களுக்கு 17 வயதில் விஷ்ணு என்ற மகன் உள்ளார்.
சில வருடங்களுக்கு முன்பு விபத்தில் சிக்கி நந்தகுமார் உயிரிழந்த நிலையில், கனகமணி தனது மகனை வளர்த்து வந்தார்.
தாராபுரம்-உடுமலை சாலையில் உள்ள தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற விஷ்ணுவை , 12-ஆம் வகுப்பில் சேர்ப்பதற்கு சென்ற தாய் கனகமணி, கல்விக்கட்டணம் செலுத்தி விட்டு இரு சக்கரவாகனத்தில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். கனகமணி ஸ்கூட்டரை ஓட்டிவந்த நிலையில் சிறுவன் விஷ்ணு பின்னால் அமர்ந்திருந்தான்.
உடுமலை சாலையிலிருந்து, தாராபுரம் கடைவீதி பகுதியை நோக்கி வந்து கொண்டிருந்தபோது, திடீரென இடது புறத்தில் இருந்து குறுக்கே வந்த இரு சக்கர வாகனத்தில் மோதாமல் இருக்க , வலது புறம் திரும்பிய போது, பின்னால் வேகமாக வந்த மாருதி 800 கார் , கனமணியின் ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் தாயும் மகனும் தூக்கி வீசப்பட்டனர், தலைக்கவசம் அணியாததால் தலையில் பலத்தகாயம் அடைந்த கனகமணி உயிருக்கு போராடினார்.
அவரை மீட்டு சிகிச்சைக்காக தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கனகமணி வரும் வழியில் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். தனது தாய் உயிரிழந்த தகவலை அறிந்த அவரது மகன் கண்ணீர் விட்டு கதறி அழுதான்
அருகில் நின்றவர்கள் மாணவனுக்கு ஆறுதல் கூறி, தந்தைக்கு தகவல் சொல்லுமாறு கூற, தனக்கு தந்தை இல்லை என்றும் இதே நாளில் தனது தந்தை சில வருடங்களுக்கு முன்பு விபத்தில் சிக்கி உயிரிழந்து விட்டதாகவும் கண்ணீர் விட்டு கதறியது வேதனையின் உச்சமாக இருந்தது.
தந்தையும், ஒரே ஆதரவாக இருந்த தாயையும் இழந்து மாணவன் தவித்தது அனைவரையும் கலங்கசெய்தது. இந்த விபத்து தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் கனகமணி மீது மோதிய மூலனூர் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளரான பெண் அதிகாரிக்கு சொந்தமான கார் என்பது தெரியவந்தது. அந்த காரை ஓட்டிவந்த ஓட்டுனரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu