BIG STORIES
“வருத்தமில்லை..” கொக்கரித்த பயங்கரவாதி மசூத் அசாருக்கு பயந்து பாக். ராணுவம் ஆஜர்..! அம்பலப்பட்டு நின்ற பகைவன்
May 08, 2025 01:21 AM
1188
“வருத்தமில்லை..” கொக்கரித்த பயங்கரவாதி மசூத் அசாருக்கு பயந்து பாக். ராணுவம் ஆஜர்..!
இந்தியாவின் சிந்தூர் துல்லிய தாக்குதலில் பயங்கரவாதி மசூத் அசாரின் குடும்பத்தினர் 10 பேர் கொல்லப்பட்ட நிலையில் தனக்கு வருத்தமோ விரக்தியோ இல்லை என்று அவன் அறிக்கை வெளியிட்டுள்ளான். பலியான அவனது குடும்பத்தினரின் இறுதிச்சடங்கில் பாகிஸ்தான் ராணுவத்தினரும், அரசு உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலால் சர்வதேச பயங்கரவாதியாக பட்டியலிடப்பட்டவன் ஐம்பத்தாறு வயது மசூத் அசார்.
2001 இந்திய நாடாளுமன்றத் தாக்குதல், 2008 மும்பை தாஜ் ஓட்டல் தாக்குதல்கள், 2016 பதான்கோட் ராணுவ வீரர்கள் மீதான தாக்குதல் மற்றும் 2019 புல்வாமா தாக்குதல் உட்பட இந்தியாவில் நடந்த பல பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு மூளையாக இருந்துள்ளான்.
இவன் பாகிஸ்தானில் இருப்பது ஊரரிந்த விஷயம் என்றாலும், மசூத் அசார் பற்றிய தகவல் எதுவும் தங்களிடம் இல்லை என்று பாகிஸ்தான் பலமுறை மறுத்து வந்தது.
பஹல்காமில் 26 அப்பாவிகள் கொல்லப்பட்ட கொடூரமான பயங்கரவாத தாக்குதலுக்கு பழிவாங்கும் வகையில், நேற்று இரவு பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள ஒன்பது இடங்களில் இந்தியா ஆப்ரேசன் சிந்தூர் ஆப்ரேசன் என்ற பெயரில் துல்லிய தாக்குதல் நடத்தியது.
ரஃபேல் விமானம் மூலம் 24 துல்லிய ஏவுகணைகளை ஏவி நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல்களில் 70க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் இந்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தது.
அதன்படி பாகிஸ்தான் நிலப்பரப்பில் உள்ள 4 முகாம்கள், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 5 முகாம்கள் தாக்கப்பட்டன. பஹவல்பூர் ஜெய்ஸ்-இ-முகமது தலைமையகம், முரிட்கே லஷ்கர்-இ-தொய்பா பயிற்சி முகாம், கோட்லி தற்கொலை தாக்குதல் பயிற்சி முகாம், முசாபராபாத் இறக்குமதி முகாம், பர்னாலா லஷ்கர் ஆதரவு முகாம், சியால்கோட் ஹிஸ்புல் முஜாஹிதீன் பயிற்சி முகாம் ஆகியவை தகர்க்கப்பட்டன.
இந்த தாக்குதலில் ஏராளமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக ஜெய்ஸ்-இ-முகமது அமைப்பின் தலைமையகத்தை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் மசூத் அசாரின் குடும்பத்தினர் 10 பேரும் அவரது ஆதரவாளர்கள் நான்கு பேரும் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது.
இது தொடர்பாக மசூத் அசாரின் அறிக்கையை பிடிஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அதில் "இன்றிரவு எனது குடும்பத்தில் பத்து பேர் மகிழ்ச்சியால் ஆசீர்வதிக்கப்பட்டனர்... என்றும் ஐந்து பேர் அப்பாவி குழந்தைகள், என் மூத்த சகோதரி, அவரது மரியாதைக்குரிய கணவர். எனது மருமகன் அறிஞர் ஃபாசில் பன்ஜே அவரது மனைவி மற்றும் எனது அன்புக்குரிய அறிஞர் ஃபாசிலா பன்ஜி ... எனது அன்பு சகோதரர் ஹுசைஃபா மற்றும் அவரது தாயார். இன்னும் இரண்டு அன்பான தோழர்கள்," என்றும் கொல்லப்பட்டவர்கள் அல்லாஹ்வின் விருந்தினர்களாகிவிட்டதாக மசூத் அசார் குறிப்பிட்டுள்ளான்
இதனால் தனக்கு "வருத்தமோ விரக்தியோ இல்லை" என்று அவர் கூறி உள்ள மசூத் அசார் "மாறாக, பதினான்கு பேர் கொண்ட இந்த மகிழ்ச்சியான கேரவனில் நானும் இணைந்திருப்பேன் என்பது ஏனெனில் அவர்கள் தியாகம் செய்திருக்கிறார்கள் தனது மனதில் மீண்டும் மீண்டும் தோன்றுகிறது," என்று குறிப்பிட்டுள்ளான்.
"அவர்கள் புறப்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது, ஆனால் இறைவன் அவர்களைக் கொல்லவில்லை" என்று குறிப்பிட்டுள்ள பயங்கரவாதி மசூத் அசார், இறுதிச் சடங்கு பிரார்த்தனைக்கு அனைவரும் வருமாறு மக்களை அழைத்துள்ளான்.
பயங்கரவாதியின் அழைப்பை ஏற்று, அவனது குடும்பத்தினரின் இறுதிச்சடங்கில் பாகிஸ்தான் ராணுவத்தினரும் அரசு நிர்வாகத்தினரும் பெரும் திரளாக கலந்து கொண்டனர்
பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் புகலிடமாக உள்ளதை மசூத் அசாரின் அறிக்கை மட்டுமல்ல, அவனது அழைப்பிற்கு பயந்து இறுதி சடங்கில் ஆஜராகி இருக்கும் பாகிஸ்தான் ராணுவத்தினரும் , உயர் அதிகாரிகளும் நிரூபித்து இருக்கின்றனர்.
கடந்த 1994 ஆம் ஆம் ஆண்டு இந்தியாவில் கைது செய்யப்பட்ட மசூத் அசாரை, 1999 ஆம் ஆண்டு பயங்கரவாதிகள் விமானத்தை கடத்தி பயணிகளை சிறைபிடித்து மிரட்டியதால் விடுவிக்க நேரிட்டது குறிப்பிடதக்கது.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu