5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!

0 1963

வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக, சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இலங்கை - திரிகோணமலையில் இருந்து சுமார் 340 கிலோ மீட்டர் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேற்கு தென்மேற்கு திசையில் நகர்ந்து பிப்ரவரி 1ம் தேதி இலங்கை கடற்கரை பகுதிகளை கடக்கக்கூடும் என்பதால், இன்று தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளது.

பிப்ரவரி 1ம் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட 11 மாவட்டங்களிலும், பிப்ரவரி 2ம் தேதி 4 மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ள வானிலை மையம், சென்னையில் ஒரு சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் கணித்துள்ளது.

மேலும் இலங்கை மற்றும் தமிழக கடலோரப்பகுதிகள், குமரிக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாமென்றும் அறிவுறுத்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments