RECENT NEWS

முருக பக்தர்கள் மாநாட்டுக்கு தடங்கலை ஏற்படுத்துகிறார்கள் - முதலமைச்சர் மீது நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

BIG STORIES

லாரி ஓட்டுனரின் கண்ணீரைத் துடைத்த வாட்ஸ் அப் குழு.. அந்த மனசு தான் இறைவன்..!

May 19, 2025 07:07 AM

827

லாரி ஓட்டுனரின் கண்ணீரைத் துடைத்த வாட்ஸ் அப் குழு.. அந்த மனசு தான் இறைவன்..!

சேலம் மாவட்டம் தம்மம்பட்டியை சேர்ந்த லாரி ஓட்டுநர் ஒருவர் மேற்குவங்க மாநிலத்தில் லாரி விபத்தில் சிக்கி சொந்த ஊர் திரும்ப இயலாமல் கண்ணீருடன் வீடியோ வெளியிட்ட நிலையில், இ-வாகன் சேவை வாட்ஸ் அப் குழு மூலம் இரண்டு லட்சம் ரூபாய் சேகரித்து அவரது லாரியையும் அவரையும் சங்ககிரிக்கு மீட்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது

சேலம் மாவட்டம் கெங்கவல்லி அடுத்த தம்மம்பட்டியை சேர்ந்தவர் நடராஜ். வங்கியில் கடன் பெற்று லாரி ஒன்றை வாங்கி சங்ககிரியில் இருந்து இயக்கி வந்தார்.

சம்பவத்தன்று லாரியை மாற்று ஓட்டுனரிடம் கொடுத்துவிட்டு உறவினரின் சுப நிகழ்ச்சிக்காக சொந்த ஊர் திரும்பி இருந்தார். இதற்கிடையே லாரி மேற்குவங்க மாநிலம் துர்காபூரில் சரக்கு ஏற்றி திரும்பிய போது சாலை விபத்தில் சிக்கியது.

இந்த விபத்தில் லாரியின் முன்பகுதி முழுமையாக சேதம் அடைந்தது. லாரி ஓட்டுநர் பலத்த காயம் அடைந்தார். தகவல் அறிந்து ,லாரி உரிமையாளரும் ஓட்டுனருமான நடராஜ் அங்கு புறப்பட்டு சென்றார்.

விபத்தில் காயமடைந்த ஓட்டுநர் சிகிச்சைக்காக அங்குள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சரக்குடன் சாலையில் நின்று கொண்டிருந்த தனது லாரியை சொந்த ஊருக்கு எப்படி கொண்டு வருவது என்பது தெரியாமல் விழிபிதுங்கி போய் லாரியின் அருகிலேயே படுத்திருந்தார்.

இந்த நிலையில் லாரியின் பின்பக்கத்தில் மற்றொரு சரக்கு வாகனம் வந்து மோதியது. இதில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

இரண்டாவது முறையாகவும் விபத்தில் சிக்கிய அந்த லாரியை அங்கிருந்து தமிழ்நாட்டிற்கு எடுத்துவர வழி தெரியாமல் தவித்த நடராஜ் , இ - வாகன் சேவை என்ற whatsapp குழுவில் தனக்கு உதவி செய்யுமாறு கேட்டு கண்ணீர் மல்க வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார் .

கண்ணீர் மல்க அவர் வெளியிட்ட வீடியோவை கண்ட இ-வாகன் சேவை குழுவினர் அவருக்கு உதவ முன் வந்தனர்.

அதன்படி ஒரு நபருக்கு 234 ரூபாய் வீதம் பணம் செலுத்தினால் எளிதாக அவரது லாரியையும் அவரையும் பத்திரமாக தமிழகத்திற்கு மீட்டு கொண்டு வந்து சேர்க்க முடியும் என்று இ - வாகன் சேவை தலைவர் கணேஷ் குமார் தெரிவித்து இருந்தார்.

அதனை ஏற்று அந்த வாட்ஸ்அப் குழுவில் இருந்த லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் அடுத்தடுத்து 234 ரூபாய் அனுப்பத் தொடங்கினர் , 24 மணி நேரத்தில் மொத்தம் இரண்டு லட்சத்து 12 ஆயிரம் ரூபாய் அளவுக்கு பணம் சேர்ந்தது.

இதையடுத்து பணம் அனுப்புவதை நிறுத்த கூறியதோடு, உதவிய உள்ளங்களுக்கு நன்றி தெரிவித்த கணேஷ் குமார் உடனடியாக தனது குழுவினருடன் இணைந்து மேற்கு வங்கத்தில் தவிக்கும் லாரி ஓட்டுனர் நடராஜுக்கு உதவ தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

லாரியை கிரேன் மூலம் மீட்டு மற்றொரு வாகனம் மூலம் சங்ககிரிக்கு இழுத்து வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் ஓட்டுநர் நடராஜுக்கு தேவையான அனைத்து சட்ட உதவிகளையும் செய்து வருகின்றனர்.

இதனால் கடந்த மூன்று தினங்களாக செய்வதறியாது மேற்கு வங்கத்தில் தவித்த தமிழக லாரி ஓட்டுனருக்கு விடிவு காலம் பிறந்துள்ளது. "கேளுங்கள் தரப்படும்" என்பது இறைவனுக்கு மட்டுமல்ல ஈவாகன் சேவைக்கும் பொருந்தி போகிறது.

SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

அட கடவுளே... மனைவியின் கடைசி ஆசை... அஸ்தியை கரைக்க 
வந்தவருக்கு இப்படி ஆகவேண்டுமா?

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies