BIG STORIES
“அந்த புள்ள வாழணும்..” புதைச்சாலும் அழுததால் உயிர் தப்பிய பெண் குழந்தை..! எல்லை மீறிய காதலின் பரிசு
May 18, 2025 06:32 AM
2605
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே பிறந்து சில நிமிடங்களேயான பெண் குழந்தையை , தாய் மண்ணில் புதைத்த நிலையில் குழந்தையின் அழுகை சத்தம் கேட்டு வந்த மூதாட்டி ஒருவர் மீட்டு போலீசில் ஒப்படைத்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் பனையப்பட்டி அருகே உள்ள உதயசூரியபுரம் பகுதியைச் சேர்ந்த 22 வயது மாணவிக்கு பிறந்த பாவத்தால் மண்ணில் உயிரோடு புதைக்கப்பட்ட பச்சிளம் பெண் குழந்தை தான் வீரிட்டு அழுததால் உயிர் பிழைத்துள்ளது.
இலுப்பூர் அருகே உள்ள விடுதியில் தங்கி தனியார் நர்சிங் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வந்த மாணவிக்கும் வயலோகம் பகுதியைச் சேர்ந்த சிலம்பரசன் என்ற இளைஞருக்கும் காதல் மலர்ந்துள்ளது.
இருவரும் பல இடங்களுக்கும் ஜாலியாக ஊர் சுற்றி வந்ததால், அந்த மாணவி கர்ப்பமானதாக கூறப்படுகின்றது. இதனை தனது வீட்டிற்கு தெரியாமல் ரகசியம் காத்து வந்த நிலையில் 10 மாதம் கடந்ததால் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்த மாணவை, ஒரு வாரத்திற்கு முன்பு வீட்டிற்கு வந்துள்ளார் .
தந்தை வெளிநாட்டில் இருப்பதாக கூறப்படும் நிலையில், நிறைமாத கர்ப்பமாக இருந்த மாணவி சனிக்கிழமை மதிய வேளையில் அவரது வீட்டிலேயே தனக்குத்தானே பிரசவம் பார்த்து இந்த பெண் குழந்தையை பெற்றெடுத்ததாக கூறப்படுகிறது.
குழந்தையின் தொடர்ச்சியான அழுகை சத்தம் தன்னை காட்டிக் கொடுத்து விடக்கூடாது என்று, பயந்து போய் அந்த குழந்தையை தூக்கிச்சென்று வீட்டு வாசலில் குழாய் பதிப்பதற்கு தோண்டி மூடப்பட்ட இடத்தில், அவசர அவசராமக கையால் மேலோட்டமாக குழியை தோண்டி உள்ளார். பெண் குழந்தையை உயிருடன் அந்த குழியில் போட்டு மண்ணை போட்ட போது அந்த குழந்தை அதீத சத்தத்துடன் வீரிட்டு அழுதுள்ளது.
எதிர் வீட்டு தின்னையில் அமர்ந்து கூடை முடைந்து கொண்டிருந்த மூதாட்டி ஒருவர் குழந்தையின் அழுகை சத்தம் கேட்டு எழுந்து வந்துள்ளார். இதனால் குழந்தையை முழுமையாக மூடாமல் விட்டு விட்டு மாணவி வீட்டுக்குள் ஓடி ஒழிந்து கொண்டதாக கூறப்படுகின்றது.
அந்த மூதாட்டி அரையும் குறையுமாக புதைக்கப்பட்ட குழந்தையை வெளியில் எடுத்து பார்த்த போது குழந்தை உயிருடன் இருந்ததால் உடனடியாக அக்கம் பக்கத்தினருக்கு தகவல் தெரிவித்தார்.
பின்னர் காவல்துறையினர் உதவியுடன் பனையப்பட்டி அரசு சுகாதார நிலையத்திற்கு குழந்தை அனுப்பி வைக்கப்பட்டது. முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை ராணியார் அரசு மருத்துவமனைக்கு அந்த குழந்தை கொண்டு செல்லப்பட்டது.
சம்பவம் குறித்து விசாரித்த பனையப்பட்டி போலீசார் குழந்தையை பெற்றெடுத்த தாயான அந்த மாணவியை அழைத்துச்சென்று குழந்தையுடன் ஒரே வார்ட்டில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மாணவியை காதலித்து கர்ப்பமாக்கிய அவரது காதலன் சிலம்பரசனை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் குழந்தையை உயிரோடு கொலை செய்ய முயன்றதாக அந்த மாணவி மீதும், கொலைக்கு தூண்டுதலாக இருந்ததாக காதலன் சிலம்பரசன் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
படிக்கின்ற வயதில் எல்லை மீறிய காதலால் கர்ப்பமாகி, தனக்கு தானே பிரசவம் பார்த்து அதில் பிறந்த பெண் குழந்தையை மாணவி கொலை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu