RECENT NEWS

குட்டிகளுடன்  விளையாடும் தாய் பாண்டா கரடி..! பாண்டா கரடி பராமரிப்பு மையத்தின் காட்சிகள் வெளியீடு..

குட்டிகளுடன் விளையாடும் தாய் பாண்டா கரடி..! பாண்டா கரடி பராமரிப்பு மையத்தின் காட்சிகள் வெளியீடு..

Apr 27, 2025

குட்டிகளுடன்  விளையாடும் தாய் பாண்டா கரடி..! பாண்டா கரடி பராமரிப்பு மையத்தின் காட்சிகள் வெளியீடு..

குட்டிகளுடன் விளையாடும் தாய் பாண்டா கரடி..! பாண்டா கரடி பராமரிப்பு மையத்தின் காட்சிகள் வெளியீடு..

Apr 27, 2025

முகப்பு

நித்தியானந்தா உயிர் தியாகம்..! ரூ. 4000 கோடி யாருக்கு?

Apr 01, 2025 01:30 AM

1953

நித்தியானந்தா உயிர் தியாகம்..! ரூ. 4000 கோடி யாருக்கு?

நித்தியானந்தா உயிர் தியாகம்..! ரூ. 4000 கோடி யாருக்கு?

பாலியல் வழக்கில் சிக்கி இந்தியாவை விட்டே ஓடிச்சென்று, கைலாசா என்று நாடு உருவாக்கி விட்டதாக வீடியோக்களில் படம் காட்டிக் கொண்டிருந்த போலி சாமியார் நித்தியானந்தா உயிர் தியாகம் செய்து விட்டதாக அவரது சகோதரி மகன் வெளியிட்ட வீடியோ குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

“சுவாமி உயிர் தியாகம் செய்து விட்டதாக பிரசங்கத்தில் கூறிக்கொண்டிருப்பவர், நித்தியானந்தாவின் சகோதரி மகன் சுந்தரேஸ்வரன்.

திருவண்ணாமலையில் இருந்து கர்நாடகத்துக்கு இடம் பெயர்ந்து ஆன்மீக குருஜியாகி ... அகமதாபாத் உள்ளிட்ட 41 இடங்களில் ஆசிரமம் அமைத்து... பாலியல் புகாரில் சிக்கியதால், நாடு விட்டு நாடு ஓடி... கண்டம் விட்டு கண்டம் தாவிய “போலி சாமியார்” நித்தியானந்தா..!

கைலாசா என்று இந்துக்களுக்கு என்று தனி நாடு உருவாக்கி விட்டதாக 2020 ஆம் ஆண்டு தினமும் மாலை 6 மணிக்கு எல்லாம் பிரசங்க வீடியோ வெளியிட்டவர் நித்தியானந்தா. கடந்த 5 வருடங்களாக வீடியோ பிரசங்கத்தை குறைத்துக் கொண்டார். இடையில் அவருக்கு டயாலிசிஸ் சிகிச்சை செய்யப்படுவதாக தகவல் வெளியானது. அவர் சுய நினைவில்லாமல் இருப்பதாகவும், உயிரிழந்து விட்டார் என்றும் தகவல் பரவியது. அப்போதும், கண்ணுக்கு தெரியாத கைலாசா நாட்டில் இருந்து மறுப்பு அறிவிப்பு ஏதும் வரவில்லை.

இந்த நிலையில் அண்மையில் நடந்த சிவராத்திரி விழா பிரசங்கத்தில் சாமி தோன்றுவார் என்று கூறப்பட்டது. சொன்னபடியே ஆன்லைனில் நித்தி தலையில் கிரீடத்துடன் தோன்றி பேசிக்கொண்டிருக்கும் போதே இது பழைய வீடியோ என்று பக்தர்கள் உணர்ந்து கேள்வி எழுப்பியதால் பிரசங்கம் பாதியிலேயே தொழில் நுட்ப கோளாறு என்று நிறுத்தப்பட்டது.

இதற்கிடையே நித்தி எங்கு இருக்கிறார் ? அவருக்கு என்ன ஆனது ? என்று எதுவும் தெரியாத நிலையில் அவரது பெயரில் இருக்கும் சொத்துக்களை நிர்வகித்து வரும் நபர்கள் அவற்றை அபகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக கூறி ராஜபாளையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நிர்வாக பொறுப்புகளில் இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டனர்

இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் நித்தியானந்தா உயிரிழந்து விட்டதாக தகவல் வெளியானது. வழக்கம் போல உலக வரை படத்தில் இல்லாத அந்த கைலாச நாட்டில் இருந்து இதற்கும் மறுப்பு செய்தி வரவில்லை.

இந்த நிலையில் தான் நித்தியின் சகோதரி மகன் சுந்தரேஸ்வரன், ஞாயிற்றுக்கிழமை வீடியோ கான்பரசிங் மூலம் மேற்கொண்ட தனது பிரசங்கத்தின் போது இந்து தர்மத்தை காப்பதற்காக சாமி உயிர் தியாகம் செய்து விட்டதாக அறிவித்து உள்ளார்.

நித்தியானந்தா உயிர் இழந்ததை சுந்தரேஸ்வரன் பிரசங்கத்தின் மூலம் உறுதிபடுத்தி இருப்பதாக கூறப்படும் நிலையில், காவல்துறையின் வழக்குகளில் இருந்து தப்பிப்பதற்காக அவர் இறந்து விட்டதாக நாடகம் நடத்தி இருக்கலாம் என்றும் கருதப்படுகின்றது. வேறு ஒரு பெயரில் வேறு கெட்டப்பில் இந்தியாவிற்குள் நுழைவதற்கு நித்தி உயிரிழப்பு நாடகம் நடத்துகிறாரா ? என்ற கோணத்திலும் அகமதாபாத் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ஒரு வேளை உண்மையிலேயே நித்தி உயிரிழந்து இருந்தால், 4000 கோடி ரூபாய் சொத்துக்களும் நடிகை ரஞ்சிதாவின் கட்டுப்பாட்டிற்குள் வந்து சேரும் என்றும் அதற்கும் 4 பேர் போட்டிக்கு வருவார்கள் என்றும் கூறப்படுகின்றது.

SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

“இனி அது பேய் கிணறு” செல்போனில் தீரா பேச்சு.. மனைவி உயிரும் போச்சு..!
  சந்தேகத்தால் ஒரு கொலை

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies