முகப்பு
அப்பா.. வேணாம்பா... மனைவி 3 குழந்தைகளை வெட்டிப்போட்ட கொடூரன்..! நாடகமாடி சிக்கியது எப்படி ?
Feb 20, 2025 01:27 AM
609
அப்பா.. வேணாம்பா... மனைவி 3 குழந்தைகளை வெட்டிப்போட்ட கொடூரன்..! நாடகமாடி சிக்கியது எப்படி ?
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே, மனைவி மற்றும் 3 குழந்தைகளை அரிவாளால் வெட்டிய கொடூரன் வெறிச்செயலால் இரு குழந்தைகள் பலியானது. தலையில் வெட்டிக் கொண்டு ஆக்டிங் கொடுத்த கொடூரன் சிக்கிய பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு
சேலம் மாவட்டம் கெங்கவல்லி அடுத்த 74 கிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள தோட்டத்து வீடு ஒன்றில் அசோக் குமார் - தவமணி தம்பதியர் வசித்து வந்தனர்.
இவர்களுக்கு வித்யாதாரணி , அருள்குமாரி என்று இருமகள்களும், அருள் பிரகாஷ் என்ற மகனும் இருந்தனர். அசோக் குமார் நெய்வேலியில் தங்கி ஆட்டோ ஓட்டி வந்தார்.
சம்பவத்தன்று காலையில் தவமணியை பார்ப்பதற்கு வீட்டுக்கு சென்ற உறவினர் ஒருவர் வீடே ரத்த சகதியாக கிடப்பதை கண்டு அதிர்ந்து போனார், தவமணி, அவரது 3 குழந்தைகளும் சரமாரியாக வெட்டப்பட்டு கிடந்தனர். குழந்தைகள் வித்யாதாரணியும், அருள் பிரகாசும் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தனர். போலீசாருக்கு தகவல் தெரிவித்து உயிருக்கு போராடிய தாய் தவமணியையும் மகள் அருள் குமாரியையும் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தவமணி குடும்பத்தினர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியது யார் ? என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை முன்னெடுத்த நிலையில் அவர்களது வீடு அமைந்துள்ள தோட்டத்துக்கு அருகே உள்ள மற்றொரு தோட்டத்தில் பின்னந்தலையில் வெட்டுக் காயங்களுடன் தவமணியின் கணவர் அசோக்குமார் கிடப்பதை கண்டுபிடித்து அவரை சிகிச்சைக்காக கெங்கவல்லி மருத்துவமனைக்கு தூக்கிச்சென்றனர்.
இதற்கிடையே அசோக் குமார் வீட்டிற்குள் இருந்து ஓடிச்சென்ற போலீஸ் மோப்ப நாய், அசோக்குமார் வெட்டுப்பட்டு கிடந்த இடம் வரை ஓடிச்சென்று நின்றதால் போலீசாரின் சந்தேகம் அசோக் குமார் மீது திரும்பியது. இவர்கள் 5 பேர் மீதும் அரிவாள் வெட்டு இருந்த நிலையில் அசோக் குமார் மீது மட்டும் வெட்டுக்காயம் குறைவாக காணப்பட்டது. அவரிடம் நடத்திய விசாரணையில் தன்னை யாரோ பின்னால் இருந்து வெட்டி விட்டு ஓடி விட்டதாக கூறினார். நெய்வேலியில் தங்கி ஆட்டோ ஓட்டிவந்த அசோக் குமார் எதற்காக இங்கு வந்தார் ? இந்த தோட்டத்துக்குள் வந்தது எப்படி ? தாக்குதல் நடத்தியது எத்தனை பேர் ? என்று போலீசார் அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டதால் அசோக் குமார் முன்னுக்கு முன் முரனாக பதில் அளித்தார். போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் கொலைக்காண மர்மம் விலகியது..
அசோக் குமாருக்கு, மனைவியின் நடத்தையில் எழுந்த சந்தேகம் தொடர்பாக 7 வருடமாக பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகின்றது. இதனால் மனைவியுடன் சேர்ந்து வாழாமல் நெய்வேலியில் தங்கி ஆட்டோ ஓட்டி வந்துள்ளார். சம்பவத்தன்று தனது மனைவியின் செல்போனுக்கு தொடர்பு கொண்ட போது, போனை எடுக்கவில்லை என்றும் அதனால் அவர் வேறு யாருடனோ பேசிக் கொண்டிருக்கலாம் என்ற ஆத்திரத்தில் வீட்டிற்கு வந்து அரிவாளால் வெட்டியதாக அசோக்குமார் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இதையடுத்து சிகிச்சையில் இருந்த அசோக்குமாரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். தந்தையின் அவசர புத்தியால் நிகழ்ந்த இந்த கொடூர கொலை சம்பவத்தில் இரு குழந்தைகள் பலியானது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu