இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்தால், திமுகவை ஆதரிப்பேன் - சீமான்

0 1779

இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்தால், திமுகவை  ஆதரிப்பேன் என்றும்  காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லையென்றால் 40 தொகுதிகளிலும் திமுகவை ஆதரிப்பேன் என்றும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்  சீமான் தெரிவித்துள்ளார்.

கோவை சித்தாபுதூர் பகுதியில் ஏன் வேண்டும் நாம் தமிழர் கட்சி என்ற தலைப்பில் நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் உரையாற்றிய அவர், தமக்கு நாடாளுமன்ற கனவு இல்லை என்றும் தமிழ் தேசிய விடுதலைதான் தம்முடைய கனவு என்றும் கூறினார்.

தமது மாவட்டத்துக்குள் பிரதமர் மோடி தேர்தலில் நின்றால் தாம் எதிர்த்து நிற்பேன்  என கூறிய சீமான் திமுக பிரதமரை எதிர்க்க வலுவான வேட்பாளரை நிறுத்தினால் அவரை ஆதரிப்பேன் என்றும் கூறினார். திமுக அந்த தொகுதியை கூட்டணிக்கு விட்டு கொடுத்தால் தாம் நேரடியாக பிரதமருடன் மோதுவேன் என்றும் சீமான் உரையாற்றினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments