பிரதமர் நரேந்திரமோடி நாளை மறுதினம் வருவதையொட்டி, சென்னை மீனம்பாக்கம் விமான நிலையப்பகுதியில் 5 அடுக்கு பாதுகாப்பு..!

0 1109

பிரதமர் நரேந்திரமோடி நாளை மறுதினம் வருவதையொட்டி, சென்னை மீனம்பாக்கம் விமான நிலையப்பகுதியில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சென்னை விமான நிலையத்தின் புதிய ஒருங்கிணைந்த முனையம் மற்றும் சென்னை - கோவை வந்தே பாரத் ரயில் சேவை துவக்க விழாவில் பங்கேற்க, பிரதமர் சென்னை வருகிறார்.

இதனையடுத்து, மீனம்பாக்கம் விமான நிலையப்பகுதியில் 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப்பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

பல்லாவரத்தில் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ள மைதானம் மற்றும் அதன் சுற்றுப்புறங்களிலும் தீவிர சோதனை மற்றும் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தங்கும் விடுதிகள், நட்சத்திர ஓட்டல்களில் சந்தேகத்திற்கிடமான நபர்கள் உள்ளனரா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பிரதமரின் வருகையை முன்னிட்டு, தாம்பரம் மாநகர பகுதிகளில் வரும் 9ம் தேதி வரை டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments