சவுதியில் நாத்திகத்தை ஊக்குவித்த ஏமன் நாட்டவருக்கு 15 ஆண்டுகள் சிறை..

சவுதி அரேபியாவில் நாத்திகத்தை ஊக்குவிக்கும் விதமாக கருத்து பதிவிட்ட நபருக்கு 15 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சவுதி அரேபியாவில் நாத்திகத்தை ஊக்குவிக்கும் விதமாக கருத்து பதிவிட்ட நபருக்கு 15 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஏமன் (Yemen) நாட்டைச் சேர்ந்த அலி அபு (Ali Abu), 2 அனாமத்திய டுவிட்டர் கணக்குகள் மூலம் மத நம்பிக்கைகளுக்கு எதிராக கருத்துகளை பதிவிட்டு வந்தார்.
நவீனமயமாக்கலை நோக்கி செல்லும் சவுதி அரசு மக்களின் தனிப்பட்ட நம்பிக்கைகளில் தலையிடுவதை நிறுத்துமாறும், கடவுள் நிந்தனையை குற்றமற்றதாக அறிவிக்குமாறும் வலியுறுத்தி வந்தார்.
டுவிட்டர் கணக்குகளுடன் இணைக்கப்பட்ட அலைபேசி எண்ணை வைத்து அதிகாரிகள் அவரை கைது செய்தனர். நாத்திகம் மற்றும் கடவுள் மறுப்பு கொள்கைகளை அலி அபு பரப்பியதாகக் குற்றம் சாட்டிய நீதிமன்றம் அவருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.
Comments