முகப்பு
பரந்தூர் விமான நிலையத்திற்கு இதுவரை 1,000 ஏக்கர் கையகப்படுத்தப்பட்டுள்ளது : வருவாய்த்துறையினர்
Nov 05, 2025 06:03 AM
48
பரந்தூர் விமான நிலையத்திற்கு இதுவரை 1,000 ஏக்கர் கையகப்படுத்தப்பட்டுள்ளது : வருவாய்த்துறையினர்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைய உள்ள பரந்தூர் விமான நிலையத்திற்கு தற்போது வரை ஆயிரம் ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு 400 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.
சென்னையின் இரண்டாவது விமான நிலையமாக காஞ்சிபுரம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் ஆகிய இரு தாலுகாக்களில், பரந்தூரை சுற்றியுள்ள, 20 கிராமங்களை உள்ளடக்கி 5,320 ஏக்கர் பரப்பளவில், பசுமைவெளி விமான நிலையம் அமைய உள்ளது.
இதில் அரசு நிலங்கள் போக மீதம் உள்ள 3,774 ஏக்கர் தனியார் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு வருகிறது. அக்டோபர் மாதம் வரை கணக்கெடுப்பின்படி, 1,000 ஏக்கர் நிலங்கள், கையகபடுத்தும் பணி முடிந்துவிட்டதாக நில உரிமையாளர்களுக்கு ரூபாய் 400 கோடி இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாக வருவாய் துறையினர் தெரிவித்து உள்ளனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu