RECENT NEWS

ஓ.எம்.ஆர். சுற்றுவட்டாரப் பகுதிகளில் அடுத்தடுத்து கொள்ளை

ஓ.எம்.ஆர். சுற்றுவட்டாரப் பகுதிகளில் அடுத்தடுத்து கொள்ளை

Nov 15, 2025

ஓ.எம்.ஆர். சுற்றுவட்டாரப் பகுதிகளில் அடுத்தடுத்து கொள்ளை

ஓ.எம்.ஆர். சுற்றுவட்டாரப் பகுதிகளில் அடுத்தடுத்து கொள்ளை

Nov 15, 2025

BIG STORIES

ஆரோக்கியமான பனங்கற்கண்டு இப்படி விற்றால் எப்படிங்க ? பெண் எழுப்பிய கேள்விகள்..!

Nov 05, 2025 01:17 AM

251

ஆரோக்கியமான பனங்கற்கண்டு இப்படி விற்றால் எப்படிங்க ? பெண் எழுப்பிய கேள்விகள்..!

ஆரோக்கியமான பனங்கற்கண்டு இப்படி விற்றால் எப்படிங்க ? பெண் எழுப்பிய கேள்விகள்..!

சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் உள்ள கடையில் காலாவதி தேதி எதுவும் குறிப்பிடபடாமல் விற்கப்பட்ட பனங்கற்கண்டு பாக்கெட் குறித்து அடுக்கடுக்கான கேள்வி எழுப்பிய பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பனங்கற்காண்டு தயாரிப்பு, காலாவதியான தேதி என எதுவும் இல்லாமல் விற்கப்படுவதை பார்த்த பெண் ஒருவர், அதுகுறித்து கேள்வி எழுப்பினார்

எந்த ஒரு விவரமும் இல்லாமல் இந்த மாதிரியான பனங்கற்கண்டு பாக்கெட்டுகள் கடையில் விற்க எப்படி அனுமதி வழங்கப்பட்டது? ரயில்வேயில் உள்ள மத்திய உணவு பாதுகாப்பு அதிகாரிகள் இதையெல்லாம் கவனிக்காமல் என்ன செய்கிறார்கள் என்ற கேள்வியும் எழுந்தது.

எந்த வித உணவு பொருளாக இருந்தாலும், அதில் முழுமையான தகவல் இருக்க வேண்டும். அதேபோல் கடைகளில், உணவு பாதுகாப்புத்துறையின் சான்றிதழ் இல்லாமல் இருப்பதும், ரயில் பயணிகள் நடமாட்டம் அதிகம் உள்ள சென்ட்ரல் ரயில் நிலையத்தில் விற்கப்படும் இந்த மாதிரியான பனங்கற்கண்டு விற்பனை, எந்த அளவுக்கு பாதுகாப்பானது என்ற கேள்விகளும் அடுக்கடுக்காக எழுந்தது.

இதுகுறித்து, பனங்கற்கண்டு விற்கும் கடையின் விற்பனையாளர் பெண் கூறும் போது, “கேரளாவில் இருந்து வருகிறது. உணவு பாதுகாப்புத்துறையின் சான்றிதழ் ஓனரிடம் இருக்கும்” என கேஷுவலாக கூறினார். இந்த பனங்கற்கண்டு பாக்கெட்டில் எவ்வித தகவலும் இல்லையே என்ற பயணியின் கேள்விக்கு, “அப்ப அப்ப பேக் செய்வது தான்” என சமாளித்தார்

எந்த ஒரு பாக்கெடில் அடைத்து விற்கப்படும் உணவு பொருட்களாக இருந்தாலும், MRP விலை, தயாரிக்கும் இடம், காலாவாதியாகும் தேதி என அதனுடைய முழு தகவல்களும் பாக்கெட்டில் இருக்க வேண்டும் என்பதே, உணவு பாதுகாப்புத்துறையின் விதியாகும். அந்த விதியை மீறி விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டிய பொறுப்பு எஃப்.எஸ்.ஓ எனப்படும் உணவு பாதுகாப்பு அதிகாரிகளின் பொறுப்பு. சென்னை செண்ட்ரல் ரயில் நிலையத்தில் உள்ள கடைகளிலும் உரிய ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

மூத்த அரசியல்வாதியை வீழ்த்தி எம்.எல்.ஏ ஆன 2k kid..!  யார் இந்த மைதிலி தாகூர்? சுவாரசிய பின்னணி..!
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies