RECENT NEWS

அலப்பறை..அட்டாக்..அட்டூழியம்..! அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்..!  சங்கத்தை கலைத்து 'ரெடி ஜுட்'  'ப்ரைட் ரைஸ்' பிரியர் சிக்கியது எப்படி?

அலப்பறை..அட்டாக்..அட்டூழியம்..! அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்..! சங்கத்தை கலைத்து 'ரெடி ஜுட்' 'ப்ரைட் ரைஸ்' பிரியர் சிக்கியது எப்படி?

Nov 18, 2025

அலப்பறை..அட்டாக்..அட்டூழியம்..! அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்..!  சங்கத்தை கலைத்து 'ரெடி ஜுட்'  'ப்ரைட் ரைஸ்' பிரியர் சிக்கியது எப்படி?

அலப்பறை..அட்டாக்..அட்டூழியம்..! அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்..! சங்கத்தை கலைத்து 'ரெடி ஜுட்' 'ப்ரைட் ரைஸ்' பிரியர் சிக்கியது எப்படி?

Nov 18, 2025

முகப்பு

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தமான S.I.R இன்று தொடக்கம்

Nov 04, 2025 01:08 AM

48

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தமான S.I.R இன்று தொடக்கம்

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தமான S.I.R இன்று தொடக்கம்

தமிழ்நாட்டில், வாக்காளர் பட்டியலில், சிறப்பு தீவிர திருத்தமான S.I.R.க்காக, வீடு வீடாக சென்று கணக்கெடுக்கும் பணிகள் இன்று முதல் தொடங்கி டிசம்பர் 4ம் தேதி வரை நடைபெற உள்ளது.

டிசம்பர் 9ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். பின்னர் ஆட்சேபனைகள் தீர்க்கப்பட்டு, இறுதி வாக்காளர் பட்டியல் 2026 பிப்ரவரி 7ம் தேதி வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த 1951 முதல் 2004 வரை வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி 8 முறை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடைசியாக 2002-04 காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்டது. முந்தைய 8 முறையும் வாக்குரிமை மட்டுமே சரி பார்க்கப்பட்டது. தற்போது குடியுரிமையும் சரி பார்க்கப்பட இருப்பதாக கூறப்படுவதால், அதற்காக 11 ஆவணங்கள் சரிபார்க்கப்படுகிறது.

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்குப் பிறகு ஆதார் அட்டை 12வது ஆவணமாக இதில் சேர்க்கப்பட்டாலும், S.I.Rல், ஆதார் அட்டை ஓர் அடையாள ஆவணமாக மட்டுமே ஏற்கப்படும். குடியுரிமை, பிறந்த தேதிக்கான சான்றாக ஆதார் ஏற்கப்படாது என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. ஒவ்வொரு வாக்குச்சாவடியின் தேர்தல் அலுவலர் வீடு வீடாகச் சென்று படிவங்களை வழங்கி வாக்காளர்களின் விவரங்களை சேகரிப்பார்.

அப்போது 2002-04க்கு முன்பு வாக்காளர் பட்டியலில் பெயர் இருப்பவர்கள் எந்த ஆவணமும் தரத் தேவை இல்லை.

1987ம் ஆண்டுக்குப் பிறகு பிறந்தவர்கள் அனைவரும் எஸ்ஐஆர்ல் குறிப்பிடப்பட்டுள்ள ஏதேனும் ஒரு ஆவணத்தையும், பெற்றோர் யாரேனும் ஒருவருடைய ஆவணத்தையும் கொடுக்க வேண்டும். 2004ம் ஆண்டுக்குப் பிறகு பிறந்தவர்கள் தங்களுடைய ஆவணம் மற்றும் பெற்றோர் இருவரின் ஆவணத்தையும் கொடுக்க வேண்டும்.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

காதல் மனைவி தலையை வெட்டிய  'சைக்கோ' கணவன்..!  மலைக்கோவிலில் திகில்..! திருமணமான 4 மாதத்தில் சோகம்
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies