முகப்பு
காதலனுடன் காரில் இருந்த மாணவிக்கு நேர்ந்த கொடுமை..! அந்த 3 பேர்..? திடுக் தகவல்..!
Nov 03, 2025 04:12 PM
685
அந்த 3 பேர்..? திடுக் தகவல்..!
கோவையில் விமான நிலையம் பின்புறம் காரில் அமர்ந்து காதலனுடன் பேசிக் கொண்டிருந்த கல்லூரி மாணவி 3 பேரால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. பீளமேட்டில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்த மதுரையை சேர்ந்த மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி ஆடையின்றி தவித்த நிலையில் போலீசார் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவையில் இருட்ட தொடங்கியதுமே, விமான நிலையத்துக்கு பின்புறம், காதலர்களின் மீட்டிங் ஸ்பாட்டாகவும், மது அருந்துவோரின் ரிலாக்ஸ் பிலேஸாகவும் இருந்து வந்த இந்த ஒதுக்கு புறமான இடத்தில் தான் மாணவிக்கு கூட்டு பாலியல் வன் கொடுமை நிகழ்ந்துள்ளது..!
மதுரையை சேர்ந்த இளம்பெண் ஒருவர், கோவை பீளமேட்டில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வரும் நிலையில் வெளியில் அறை எடுத்து சக மாணவிகளுடன் தங்கி இருந்தார். இன்ஸ்டாகிராமில் தனது சகோதரிக்கு அறிமுகமான இருகூரை சேர்ந்தவருடன் அந்த மாணவிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஆட்டோ மொபைல் தொழில் செய்து வரும் அந்த நபரின் காதல் மொழி இருவரையும் நெருக்கமாக்கியுள்ளது.
இந்த நிலையில் ஞாயிறு அன்று காதலனை சந்திக்க சென்ற மாணவி தான் தங்கி இருக்கும் அறைக்கு இரவு திரும்பவில்லை. இந்த நிலையில் அதிகாலை 4 மணி அளவில் , விமான நிலையம் பின்புறம் இளம்பெண் ஒருவர் ஆடையின்றி நடந்து செல்வதாக காவல் கட்டுப்பாட்டறைக்கு தகவல் வந்துள்ளது. சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் அந்த பெண்ணுக்கு ஆடைகள் கொடுத்து விசாரித்தபோது அங்கு அரங்கேறிய கொடூரம் தெரியவந்தது.
மயங்கிய நிலையில் கிடந்த காதலனையும், இளம் பெண்ணையும் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சை அளித்து மேல் சிகிசைக்காக கோவை அரசு மருத்துவமனையில் இருவரும் அனுமதிக்கப்பட்டனர். மயக்கம் தெளிந்த நிலையில் இருவரிடமும் போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
சம்பவத்தன்று மாலை சந்தித்த காதல் ஜோடி இரவு 11 மணி அளவில் காரில், கோவை விமான நிலையம் பின்புறம் உள்ள காலி மைதானத்திற்கு சென்றுள்ளார். அங்கு காரை நிறுத்தி விட்டு இருவரும் பேசிக் கொண்டிருந்ததை நோட்டமிட்டு அங்கு வந்த 3 பேர் காரை தட்டி திறக்க சொன்னதாக கூறப்படுகின்றது. உஷாரான காதலன் காரின் கதவை திறக்க மறுத்து புறப்பட முயற்சித்துள்ளார். அதற்குள்ளாக அந்த கும்பல் அரிவாளை கொண்டு காரின் முன் பக்க கண்ணாடியை வெட்டியும், கல்வீசி உடைத்தும் தாக்கி உள்ளனர். அத்தோடு ஜன்னல் கண்ணாடியை உடைத்து காரின் கதவை திறந்துள்ளனர்.
காரை திறந்து கொண்டு இறங்கிய இளம் பெண்ணின் காதலன் தலையில் அரிவாளை மடக்கி வைத்து கடுமையாக தாக்கி உள்ளனர். இதில் அவர் அங்கேயே மயங்கி விழுந்ததால், காருக்குள் இருந்த அந்த மாணவியை, 150 அடி தூரத்தில் உள்ள புதர் பகுதிக்கு தூக்கிச்சென்று கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளனர். இந்த கொடுமையில் ஈடுபட்ட 3 பேரும் போதையில் இருந்ததாக மாணவி போலீசாரிடம் தெரிவித்துள்ளார். நீண்ட நேரத்துக்கு பின்னர் அந்த 3 பேரும் தப்பிச்சென்ற நிலையில் , அதிகாலை என்ன செய்வதென்று தெரியாத நிலையில் புதர் பகுதியில் இருந்து எழுந்து அந்த மாணவி அழுது கொண்டே எழுந்து வெளியே நடந்து வந்ததாக போலீசாரிடம் வாக்கு மூலம் அளித்துள்ளார்.
போலீசார் 7 தனிப்படைகளை அமைத்து 3 பேரையும் தேடி வருகின்றனர். இதற்கிடையே சம்பவ இடத்துக்கு அருகே கேட்பாரற்று நிறுத்தப்பட்டிருந்த டிவிஎஸ் சூப்பர் எக்ஸல் மொபட்டை கைப்பற்றிய போலீசார் அது யாருடையது? இந்த வண்டிக்கும், தப்பிச்சென்ற அந்த மர்ம ஆசாமிகளுக்கும் ஏதாவது தொடர்பிருக்குமா? என்று விசாரித்து வருகின்றனர்.
மேலும் அந்த ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்குள் வந்து சென்ற நபர்களை அடையாளம் காண 100க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் தீவிர ஆய்வு செய்து வருகின்றனர்.
அதே நேரத்தில் நாளுக்கு நாள் போதையர்களின் அட்டகாசம் அதிகரித்து வரும் நிலையில், கோவை விமான நிலையத்தின் பின்புறம், சமூக விரோத செயலுக்கு வசதியாக காணப்படும் இந்த ஆள் நடமாட்டம் குறைந்த பகுதியில், இரவு நேரங்களில் போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu