RECENT NEWS

ஓ.எம்.ஆர். சுற்றுவட்டாரப் பகுதிகளில் அடுத்தடுத்து கொள்ளை

ஓ.எம்.ஆர். சுற்றுவட்டாரப் பகுதிகளில் அடுத்தடுத்து கொள்ளை

Nov 15, 2025

ஓ.எம்.ஆர். சுற்றுவட்டாரப் பகுதிகளில் அடுத்தடுத்து கொள்ளை

ஓ.எம்.ஆர். சுற்றுவட்டாரப் பகுதிகளில் அடுத்தடுத்து கொள்ளை

Nov 15, 2025

BIG STORIES

எரிக்கப்படவில்லையாம்.. எரித்துக் கொண்டாராம்... காதலுக்காக உயிர் தியாகம்..! பெண் மரணத்தில் திருப்பம்

Nov 02, 2025 03:03 AM

429

எரிக்கப்படவில்லையாம்.. எரித்துக் கொண்டாராம்... காதலுக்காக உயிர் தியாகம்..!
  பெண் மரணத்தில் திருப்பம்

எரிக்கப்படவில்லையாம்.. எரித்துக் கொண்டாராம்... காதலுக்காக உயிர் தியாகம்..!

திருச்சியில் நேர்முகத்தேர்வுக்கு சென்ற பெண் எரித்துக் கொல்லப்பட்டதாக கூறப்பட்ட வழக்கில் திடீர் திருப்பமாக , உயிரை விட்ட காதலனுக்காக 9 மாதமாக மன அழுத்தத்தில் இருந்த பட்டதாரி பெண், காட்டுக்குள் சென்று உடலில் பெட்ரோல் ஊற்றி தீவைத்துக் கொண்டதாக போலீசார் புதிய தகவல் ஒன்றை வெளியிட்டு உள்ளனர்.

திருச்சியில் நேர்முகத்தேர்வுக்கு சென்ற மீராஜாஸ்மின் என்ற பட்டாதாரி பெண் மாயமான நிலையில் , தீயில் கருகிய நிலையில் சனமங்கலம் காப்புக்காட்டில் சலமாக கண்டெடுக்கப்பட்டார். முதற்கட்ட விசாரணையில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் அவர் பைக்கில் அழைத்துச்செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் மீராஜாஸ்மின் கொலை செய்யப்பட்டவில்லை என்றும் அவர் உடலில் பெட்ரோல் ஊற்றி தீவைத்துக் கொண்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பெண்ணை ஒருவர் பைக்கில் ஏற்றிச்சென்ற ஒற்றை சிசிடிவியால் தடம்மாறிய வழக்கை நூற்றுக்கணக்கான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து துப்பு துலக்கி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். இதனை ஏற்க மறுத்து பெண்ணின் உறவினர்கள் கொலையாளியை கைது செய்யகோரி அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்

மீராஜாஸ்மின் பெற்றோருக்கு ஆதரவாக போராட்டம் செய்த கம்யூனிச இயக்க தோழர்கள் கொலையாளி மீது சாதிய வன்கொடுமை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் அதுவரை உடலை பெற மாட்டோம் என்றும் கோரிக்கை விடுத்தனர்

இந்த நிலையில் திருச்சி மாவட்ட எஸ்.பி செல்வ நாகரத்தினம் இந்த சம்பவம் தொடர்பாக அதிகார பூர்வ தகவல் ஒன்றை தெரிவித்தார். அதில் நேர்முகத்தேர்வுக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு புறப்பட்டுச்சென்ற மீராஜாஸ்மின் யாராலும் கடத்திப் கொலை செய்யப்படவில்லை என்றும் இது தற்கொலை சம்பவம் என்றும் தெரியவந்துள்ளதாக தெரிவித்தார். சம்பவத்தன்று தனது வீட்டு அருகே உள்ள பெட்ரோல் Bunk க்கு சென்று ஒரு பிளாஸ்டிக் குடிநீர் பாட்டிலில் பெட்ரோலை வாங்கிக் கொண்டு மீராஜாஸ்மின் அங்கிருந்து புத்தூர் பேருந்து நிறுத்தத்திற்கு நடந்து சென்றதாக அவர் தெரிவித்தார்.

அங்கிருந்து பேருந்தில் ஏறி, சத்திரம் பேருந்து நிலையம் வந்தடைந்ததாகவும் அங்கிருந்து பெரம்பலூர் பேருந்தில் ஏறி சிறுகனூர் பேருந்து நிறுத்தத்தில் பெட்ரோல் கேனுடன் இறங்கியதாக தெரிவித்தார். அதற்கான சிசிடிவி காட்சிகள் போலீசார் வசம் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அதன் பின்னர் சனமங்கலம் காப்புக்காட்டு பகுதிக்கு சென்று உடலில் பெட்ரோலை ஊற்றி தீவைத்துக் கொண்டு உயிரை மாய்த்துக் கொண்டதாக திருச்சி எஸ்.பி தெரிவித்தார்.

சிறுகனூரில் இருந்து சனமங்கலம் செல்ல ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு மேல் இருக்கும் நிலையில் அவரை பைக்கில் ஏற்றி சென்றது யார்? என்று உறவினர்கள் கேள்வி எழுப்பினர். “யாரிடமாவது லிப்ட் கேட்டு சென்றிருக்கலாம்..” என்றும் அது குறித்து விரிவாக விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்த போலீசார் அவர் விபரீத முடிவை மேற்கொண்டதற்கான காரணத்தையும் விவரித்தனர்.

மீரா ஜாஸ்மின் 10 ஆம் வகுப்பு படிக்கும் போதிலிருந்தே, அதே பகுதியைச் சேர்ந்த இளைஞரிடம் காதல் வயப்பட்டுள்ளார். அவர்கள் காதல் விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரியும் என்ற நிலையில் சாதியை காரணம் காட்டி அந்த இளைஞர் வீட்டில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இந்த நிலையில் கடந்த ஒன்பது மாதங்களுக்கு முன்பு அந்த இளைஞர் உயிரை மாய்த்துக் கொண்டதாக கூறப்படுகின்றது.

அன்று முதல் மிகுந்த மன அழுத்தத்துடன் காணப்பட்ட மீராஜாஸ்மின், அந்த இளைஞர் நினைவாகவே வாழ்ந்ததாக கூறப்படுகின்றது.
அந்த இளைஞர் பயன்படுத்திய செல்போன் குடும்பத்தாரிடம் இருந்தாலும், அவன் உயிரோடு இருப்பதாக கருதி அந்த செல்போனுக்கு நாள்தோறும் மீராஜாஸ்மின் குறுஞ் செய்திகள் அனுப்பி வந்ததாகவும் , இறக்கும் நாள்வரையிலும் குறுஞ்செய்தி அனுப்பியது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

எந்த சூழலிலும் அவனது செல்போனை அணைத்து வைக்க கூடாது, என்று அந்த இளைஞரின் தந்தையிடம் மீரா ஜாஸ்மின் வேண்டுகோள் விடுத்திருந்ததாகவும், தன்னை காதலித்த அந்த இளைஞர் இல்லாத இந்த உலகில் , வாழ பிடிக்காமல் தற்கொலை செய்து கொண்டதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

மேலும் பெட்ரோல் பங்க் தொடங்கி அவர் சென்ற இடங்களில் உள்ள ஏராளமான சிசிடிவி காட்சிகளை கைப்பற்றிய போலீசார் அவற்றையும் , அவரது செல்போனில் இருந்து காதலன் செல்போனுக்கு அனுப்பிய குறுஞ்செய்திகளையும் மீராஜாஸ்மினின் பெற்றோரிடம், போலீசார் ஆதாரமாக காண்பித்த நிலையில் உடலை பெற்றுக் கொள்ள சம்மதம் தெரிவித்தனர். பிணக்கூறாய்வுக்கு பின்னர் அவரது உடல் பெற்றோரிடம் ஒப்ப்டைக்கப்பட்டது. உடலில் கொலைக்காண எந்த தடயமும் இல்லை என்றும் போலீசார் தெரிவித்தனர்.

இளம் பெண் மீரா ஜாஸ்மின் மரண விவகாரத்தில் பல்வேறு யூகங்கள், கேள்விகள் , சந்தேகங்கள் தகவல்கள் வெளியான நிலையில் , தான் காதலன் நினைவாகவே வாழ்ந்து, அவர் நினைவகவே உயிரை மாய்த்துக் கொண்ட விபரீத சம்பவம் அவரது உறவினர்கள் மற்றும் தோழிகள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

மூத்த அரசியல்வாதியை வீழ்த்தி எம்.எல்.ஏ ஆன 2k kid..!  யார் இந்த மைதிலி தாகூர்? சுவாரசிய பின்னணி..!
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies