RECENT NEWS

தஞ்சாவூர் மாவட்ட கூட்டுறவுத்துறையின் 72-வது வார விழா

தஞ்சாவூர் மாவட்ட கூட்டுறவுத்துறையின் 72-வது வார விழா

Nov 19, 2025

தஞ்சாவூர் மாவட்ட கூட்டுறவுத்துறையின் 72-வது வார விழா

தஞ்சாவூர் மாவட்ட கூட்டுறவுத்துறையின் 72-வது வார விழா

Nov 19, 2025

BIG STORIES

காதலி கழுத்தை அறுத்து வாழைக்கு உரமாக்கிய கொடூர காதலன் கைது..! கத்தியால் துப்பு துலங்கியது

Nov 02, 2025 01:43 AM

371

காதலி கழுத்தை அறுத்து வாழைக்கு உரமாக்கிய கொடூர காதலன் கைது..! கத்தியால் துப்பு துலங்கியது

காதலி கழுத்தை அறுத்து வாழைக்கு உரமாக்கிய கொடூர காதலன் கைது..! கத்தியால் துப்பு துலங்கியது

கோபிச்செட்டிபாளையம் அருகே வாழை தோட்டத்தில் பெண்ணை கழுத்தறுத்து கொலை செய்து உடலை குழி தோண்டி புதைத்த காதலனை போலீசார் கைது செய்தனர்.

கோபிசெட்டிபாளையம் அருகே கெட்டிசெவியூர் சாந்திபாளையம் பகுதியை சேர்ந்தவர் மோகன், இவர் பாறை காடு பகுதியில் வாழை விவசாயம் செய்து வந்தார். அந்த வாழை தோட்டத்துக்கு சம்பவத்தன்று காலை காளான் தேடி அதே பகுதியை சேர்ந்த ஒருவர் சென்றுள்ளார், அப்போது வாழை தோட்டத்தில் காளான் தேடி நடந்து சென்று கொண்டிருந்தபோது , அங்கு ஒரு சிறிய அளவிலான கத்தியும், ரத்த கரையும் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தவர், உடனடியாக தோட்டத்தின் உரிமையாளர் மோகனுக்கு போன் செய்து தெரிவித்தார்.

தகவல் அறிந்து வந்த சம்பவ இடத்திற்கு வந்த சிறுவலூர் காவல்துறையினர் விசாரணையை முன்னெடுத்தனர். ரத்த கரையுடன் கத்தி கிடந்த வாழை மூடு அருகே தோண்டி பார்த்தனர். அங்கு பெண் சடலம் ஒன்று புதைக்கப்பட்டிருப்பதை கண்டனர். இதனைத் தொடர்ந்து திருப்பூர் மாவட்டத்தில் இருந்து மோப்ப நாய் ராஜா வரவழைக்கப்பட்டு சோதனை செய்தனர், மேலும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரித்தனர்.

அதனை தொடர்ந்து பெருந்துறை அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் இருந்து மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு அங்கேயே பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதைக்கப்பட்ட பெண்ணுக்கு 30 லிருந்து 35 வயது இருக்கும் எனவும், கத்தியால் கழுத்தை அறுத்து, கல்லால் தலையில் தாக்கி கொடூரமான முறையில் கொலை செய்து புதைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, கொலைக்கான காரணம் குறித்தும் கொலையாளி குறித்தும் சிறுவலூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்,

காவல்துறையினர் நடத்திய விசாரணையில், கெட்டி செவியரில் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட பெண் ஆப்பக்கூடல் புதுப்பாளையம் பகுதியை சேர்ந்த சோனியா (35) என்பதும் இவர் ஈரோடு திண்டல் பகுதியில் பியூட்டி பார்லரில் வேலை செய்து வருவதும் தெரிய வந்தது, மேலும் இறந்து போன சோனியாவுக்கு, 12 ஆம் வகுப்பு பயிலும் ஒரு மகனும், 10 ஆம் வகுப்பு பயிலும் ஒரு மகளும் இருந்தனர். தங்கள் தாயை காணவில்லை என்று தவித்து வருகின்றனர்.

கடந்த சில ஆண்டுகளாக சோனியா , புதுக்கரை புதூர் பகுதியில் உள்ள கார்மெண்ட்ஸ் கம்பெனியில் பணி செய்து வந்த நிலையில், சோனியா வேலை செய்து வந்த அதே கம்பெனிக்கு கெட்டிசெவியூர் சாந்திபாளையம் பகுதியைச் சேர்ந்த மோகன் என்பவர் பணிக்கு சேர்ந்துள்ளார். மோகனுக்கு திருமணமாகி குழந்தைகள் இல்லாததால் கருத்து வேறுபாடு காரணமாக மோகன் தன் மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார், சோனியாவின் கணவர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு உயிரிழந்துள்ளார்,

இந்த நிலையில் சோனியாவும் மோகனுக்கும் பழக்கம் ஏற்பட்டு அவ்வப்போது இந்த வாழைத் தோட்டத்தில் இருவரும் தனிமையில் சந்தித்து வந்ததாக கூறப்படுகிறது, கணவன் இறந்து போன நிலையில், சோனியா தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என அவ்வப்போது மோகனை மிரட்டி வந்துள்ளார். இதற்கிடையே சோனியா ஈரோடு திண்டல் பகுதியில் பியூட்டி பார்லரில் வேலைக்கு சேர்ந்ததாக கூறப்படுகின்றது.

இருந்தாலும் வாழை தோட்டத்தில் கதல் வளர்த்து வந்த சோனியா தொடர்ந்து மோகனை திருமணம் செய்து மிரட்டி வந்த நிலையில்; சம்பவத்தன்று இரவு சோனியாவை பாறைக்காடு பகுதியில் வழக்கமாக சந்திக்கும் வாழை தோட்டத்திற்கு வரவழைத்துள்ளார், அப்போது அங்கு வைத்து மீண்டும் சோனியா திருமணம் செய்து கொள்ளச் சொல்லி கட்டாயப்படுத்தி உள்ளார். திருமணம் செய்யாவிட்டால் ஊரை கூட்டி அவமானப்படுத்தி விடுவதாகவும் மோகனை மிரட்டியதாக தெரிகிறது,

இதில் ஆத்திரமடைந்த மோகன் அருகே உள்ள கல்லை எடுத்து சோனியாவை தலையில் பலமாக தாக்கியுள்ளார், மேலும் தான் மறைத்து வைத்திருந்த இலை அறுக்கும் கத்தியால் கழுத்தை அறுத்து அங்கேயே குழி தோண்டி வாழை தோட்டத்தில் புதைத்ததாக வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர். மேலும் சோனியாவின், போன் ஆடைகள் உள்ளிட்டவற்றை அருகில் உள்ள கீழ்பவானி வாய்க்காலில் வீசியதும் விசாரணையில் தெரிய வந்தது,

அதனைத் தொடர்ந்து சோனியாவின் உடலை கைப்பற்றி பெருந்துறை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்த காவல் துறையினர், மோகனை கைது செய்தனர்.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

காதல் மனைவி தலையை வெட்டிய  'சைக்கோ' கணவன்..!  மலைக்கோவிலில் திகில்..! திருமணமான 4 மாதத்தில் சோகம்
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies