RECENT NEWS

ஓ.எம்.ஆர். சுற்றுவட்டாரப் பகுதிகளில் அடுத்தடுத்து கொள்ளை

ஓ.எம்.ஆர். சுற்றுவட்டாரப் பகுதிகளில் அடுத்தடுத்து கொள்ளை

Nov 15, 2025

ஓ.எம்.ஆர். சுற்றுவட்டாரப் பகுதிகளில் அடுத்தடுத்து கொள்ளை

ஓ.எம்.ஆர். சுற்றுவட்டாரப் பகுதிகளில் அடுத்தடுத்து கொள்ளை

Nov 15, 2025

BIG STORIES

ஓட்டுனர் கொலைக்கு ஒரு வருடம் கழித்து கவுன்சிலர் வீட்டில் பதில்..!காதலுக்கு பலியான ஓட்டுனர்..

Nov 01, 2025 04:48 PM

247

ஓட்டுனர் கொலைக்கு ஒரு வருடம் கழித்து கவுன்சிலர் வீட்டில் பதில்..!காதலுக்கு பலியான ஓட்டுனர்..

மேட்டுப்பாளையத்தில் மாயமான ஓட்டுனர் கொலை செய்து மாதேஸ்வரன் மலையில் எரிக்கப்பட்டது ஒரு வருடம் கழித்து தெரியவந்ததை தொடர்ந்து திமுக கவுன்சிலரையும், அவரது இரு மகன்களையும் போலீசார் கைது செய்துள்ளனர். திருமணமான பெண்ணை காதல் வலையில் வீழ்த்திய ஓட்டுனர் பலிகொடுக்கப்பட்ட பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு...

குடும்பத்து பெண்ணின் மனதை கெடுத்ததால் கார் ஓட்டுனரை கொலை செய்து காணா பிணமாக்கியதாக கைது செய்யப்பட்ட கவுன்சிலர் குடும்பத்தினர் இவர்கள் தான்..!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மகா தேவபுரம் பகுதியை சேர்ந்தவர் வாடகை கார் ஓட்டுனர் அலாவுதீன்.

மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் உள்ள கார் ஸ்டான்டில் கார் வைத்து வாடகைக்கு ஓட்டி வந்த இவர் கடந்த 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி மாயமானார்.

அக்கம் பக்கம் எங்கு தேடியும் விசாரித்தும் அவரைப் பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. மனைவி சுமையா பானு அளித்த புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் மேன் மிஸ்ஸிங் பிரிவில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மேட்டுப்பாளையம் சிறுமுகை சாலையில் உள்ள ஆட்டோ ஸ்பேர் பார்ட்ஸ் கடை உரிமையாளர் ஹக்கீம் என்பவரை மாயமான அலாவுதீனின் தம்பி ஹாரீஸ் கத்தியால் குத்த முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்த விசாரணையில் போது அலாவுதீன் மனைவியுடன் ஹக்கீம் தவறான தொடர்பில் இருப்பதாகவும், அதனால் தான், தனது அண்ணன் அலாவுதீன் காணாமல் போனதாகவும் ஹாரீஸ் போலீசாரிடம் தெரிவித்தார்.

மனைவியுடனான தவறான தொடர்பை கண்டித்ததால் அலாவுதீனை ஹக்கீம் ஏதாவது செய்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணையை முன்னெடுத்த போலீசாருக்கு அடுத்தடுத்து டுவிஸ்ட் காத்திருந்தது.

கார் ஓட்டுனர் அலாவுதீன் மாயமான அன்று மேட்டுப்பாளையம் திமுக கவுன்சிலர் ரவிக்குமாரின் வீட்டுக்கு சென்றதாகவும் , அதன் பின்னர் தான் அவர் மாயமானதாகவும் போலீசாரிடம் தெரிவித்தார்.

இதையடுத்து கவுன்சிலர் ரவிக்குமார் மற்றும் அவரது இரு மகன்களையும் போலீசார் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்தனர்.

அலாவுதீன் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் கார் ஓட்டி வந்த நிலையில், அங்கு செல்போன் கடை வைத்து நடத்தி வந்த காரமடை நகராட்சி 3வது வார்டு திமுக கவுன்சிலர் ரவிக்குமாரின் இரண்டாவது மகன் சரண்குமார் மனைவியுடன் தவறான தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகின்றது.

ஒரு கட்டத்தில் மனைவியின் திருமணம் மீறிய உறவு, கணவன் சரண்குமாருக்கு தெரியவந்தது. இதனால் ஆத்திரமடைந்த அவர் மனைவியை கண்டித்துள்ளார் . அவரது மனைவி கோபித்து கொண்டு கர்நாடகா மாநிலம் மங்களூர் பகுதியில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.

மனைவியின் மனதையும் மானத்தையும் கெடுத்ததோடு, குடும்பம் பிரிவதற்கும் காரணமான அலாவுதீனை தீர்த்து கட்ட தந்தை மற்றும் 2 மகன்கள் திட்டமிட்டதாகவும், சம்பவத்தன்று கார் வாடகைக்கு வேண்டும் என்று அலாவுதினை வரவழைத்து மூவரும் சேர்ந்து அடித்து கொலை செய்ததும் விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

கொலை சம்பவத்தை மறைப்பதற்காக உடலை மூட்டையில் கட்டி எடுத்து சென்று மாதேஸ்வரன் மலை கோவில் பின்புறம் உள்ள புதரில் குப்பைகளை கொட்டும் இடத்தில் வைத்து தீயிட்டு எரித்து விட்டு ஒன்றும் நடக்காதது போல தங்களது இயல்பான வாழ்க்கையை நடத்தியதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.

அதன் பின்னர் கர்நாடகாவில் இருந்து தனது மனைவியை அழைத்து வந்து சரண்குமார் ஒன்றாக குடித்தனம் நடத்தி வந்ததும் தெரியவந்தது

இதனையடுத்து கொலை வழக்கில் கவுன்சிலர் ரவிக்குமார் (59 ) மற்றும் அவரது மகன்கள் சரண்குமார், (33), மணிகண்டன் (35) ஆகிய மூவரையும் கைது செய்த மேட்டுப்பாளையம் போலீசார் , நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி 3 பேரையும் சிறையில் அடைத்தனர் . எரிக்கப்பட்ட அலாவுதீன் உடல் பாகத்தின் எலும்பு களை சேகரித்து ரசாயண பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மனைவியின் திருமணம் கடந்த உறவால், கணவனின் கொடூர கொலை சம்பவம்ஒரு வருடம் கழித்து துப்புதுலங்கிய நிலையில் ஹக்கீமை போலீசார் எச்சரித்து அனுப்பியதாக கூறப்படுகின்றது.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

மூத்த அரசியல்வாதியை வீழ்த்தி எம்.எல்.ஏ ஆன 2k kid..!  யார் இந்த மைதிலி தாகூர்? சுவாரசிய பின்னணி..!
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies