RECENT NEWS

உலகக்கோப்பை, இலச்சினையை அறிமுகப்படுத்திய கனிமொழி

உலகக்கோப்பை, இலச்சினையை அறிமுகப்படுத்திய கனிமொழி

Nov 13, 2025

உலகக்கோப்பை, இலச்சினையை அறிமுகப்படுத்திய கனிமொழி

உலகக்கோப்பை, இலச்சினையை அறிமுகப்படுத்திய கனிமொழி

Nov 13, 2025

BIG STORIES

கொலையும் செய்வாள் பத்தினி.. சந்தேகனின் கதையை தீர்த்து வீட்டிற்குள் புதைத்த 3 பெண்கள்..! Working Woman's Reaction

Oct 31, 2025 01:20 AM

326

கொலையும் செய்வாள் பத்தினி.. சந்தேகனின் கதையை தீர்த்து வீட்டிற்குள் புதைத்த 3 பெண்கள்..! Working Woman's Reaction

கொலையும் செய்வாள் பத்தினி.. சந்தேகனின் கதையை தீர்த்து வீட்டிற்குள் புதைத்த 3 பெண்கள்..!

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே கணவனை கொலை செய்து வீட்டிற்குள் புதைத்து விட்டு மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பதாக நாடகமாடிய மனைவி மற்றும் இரண்டு மகள்களை போலீசார் கைது செய்தனர். வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து கொண்டு வேலைக்கு சென்று வந்த பெண்களின் நடத்தையில் சந்தேகப்பட்டதால் ஆவேசமான பெண்கள் செய்த சம்பவம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு..

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள மல்லாங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிவேலு (55) இவரது மனைவி மகாலெட்சுமி(43). இவர்களுக்கு தமிழ் செல்வி(25), சாரதா(20) ஆகிய இரண்டு மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் பழனிவேலு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்ற நிலையில் காணாமல் போய் விட்டதாகவும், அவரது மனைவி மற்றும் மகள்கள் மீது சந்தேகம் இருப்பதாகவும் கூறி பழனிவேலுவின் சகோதரி காவேரி, நமணசமுத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

காவல்துறையினரின் விசாரணையில் பழனிவேலுவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அவரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்திருப்பதாக கூறி சமாளித்து உள்ளார் மகாலெட்சுமி. எந்த அரசு மருத்துவமனை என்று கேட்டு போலீசார் கேள்விகளால் துளைத்தெடுத்த நிலையில் முன்னுக்கு பின்னாக பதில் அளித்து மகாலெட்சுமி வசமாக சிக்கிக் கொண்டார். இதையடுத்து பழனிவேல் மாயமான சம்பவத்தில் திகில் பின்னணி வெளிச்சத்துக்கு வந்தது.

பழனி வேலுவின் உடலில் கொழுப்புக்கட்டி இருந்ததால் அவர் கடந்த 8 வருடங்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து சிகிச்சை மேற்கொண்டு வந்ததாக கூறப்படுகின்றது. மகளிர் சுய உதவி குழுவில் கடன் பெற்று கணவனின் சிகிச்சைக்கு தேவையான பணத்தை மகாலெட்சுமி செலவழித்துள்ளார். மனைவியும், மூத்த மகளும் வேலைக்கு சென்று வந்த நிலையில் இளைய மகள் கல்லூரியில் படித்து வந்தார். 3 பேரும் வெளியில் சென்று வருவது குறித்து அக்கம் பக்கத்தினர் ஏதாவது தப்பாக பேசினால், அதனை வைத்துக் கொண்டு பழனிவேலுவும் தனது மனைவி மற்றும் மகள்களின் நடத்தையில் சந்தேகப்பட்டு கடுமையான வார்த்தைகளால் திட்டி தீர்த்ததாக கூறப்படுகின்றது.

நாளுக்கு நாள் பழனி வேலுவுக்கு நோய் முற்றிய நிலையிலும் தன்னை அக்கறையுடன் கவனித்துக் கொண்ட மனைவி என்றும் பாராமல் ஆபாசமான வார்த்தைகளால் சுட்டு வந்ததாக கூறப்படுகின்றது. இந்நிலையில் கடந்த 53 நாட்களுக்கு முன்பு மகாலட்சுமிக்கும் அவரது கணவர் பழனிவேலுக்கும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது பழனிவேலு மகாலட்சுமியை திட்டிய போது ஆத்திரமடைந்த மகாலட்சுமி மற்றும் அவரது இருமகள்களும் சேர்ந்து பழனிவேலுவின் கழுத்தில் கயிற்றை போட்டு இறுக்கி கொலை செய்தது தெரியவந்ததாக, போலீசார் தெரிவித்தனர்.

பழனிவேலுவின் சடலத்தை எங்கே வீசினீர்கள் ? என்று போலீசார் கேட்ட போது? தனது வீட்டின் கழிவறை அருகே குழிதோண்டி புதைத்ததாக கூறி திகில் கிளப்பினார் மகாலெட்சுமி. இதனை தொடர்ந்து மகாலட்சுமியையும் , கொலைக்கு உடந்தையாக இருந்ததாக அவரது இரு மகள்களையும் கைது செய்தனர். போலீசார் பழனிவேலுவை புதைத்த இடத்திற்கு மனைவி மகாலட்சுமியை அழைத்துச் சென்றனர். திருமயம் வட்டாட்சியர் வரதராஜன் முன்னிலையில் இலுப்பூர் டிஎஸ்பி வித்யா தலைமையிலான நமணசமுதத்திரம் போலீசார் பழனிவேலுவின் உடலைத் தோண்டி எடுத்து அங்கேயே மருத்துவர்களைக் கொண்டு உடற்கூறு ஆய்வு செய்த பின்னர் எலும்பு, முடி உள்ளிட்ட உடல் பாகங்களை ரசாயன பரிசோதனைக்காக எடுத்துச்சென்றனர்.

வீட்டை சுற்றி அமைக்கப்பட்டிருந்த கம்பு வேலியை மறைத்து துணிகள் போர்த்தப்பட்டிருந்ததால், பழனிவேலுவை புதைத்ததை கூட எவரும் பார்க்கவில்லை என்று போலீசார் தெரிவித்த்னர். தீராத சந்தேகத்தால் தினமும் தீ போன்ற வார்த்தைகளால் சுட்டதால், நோயாளியான கணவர் என்றும் பாராமல் கொலை செய்து புதைத்ததாக மகாலெட்சுமி வாக்குமூலம் அளித்ததாக போலீசார் கூறினர். கைது செய்யப்பட்ட தாய், மகள்கள் ஆகிய 3 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

உலுக்கிய டபுள் மர்டர் பயங்கரம் கூட்டத்தில் போலீஸிடம் நீதிகேட்டு 
முதல் ஆளாக நின்று கதறிய கொ**காரன் சிக்கியது எப்படி..?
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies