முகப்பு
போதைப்பொருள் கும்பலைச் சேர்ந்த 162 பேர் சுட்டுக் கொலை
Oct 30, 2025 03:06 AM
82
போதைப்பொருள் கும்பலைச் சேர்ந்த 162 பேர் சுட்டுக் கொலை
பிரேசிலில் போதைப்பொருள் கடத்தல் கும்பலை களையெடுப்பதாகக் கூறி அந்நாட்டு போலீசார் 162 பேரை சுட்டுக் கொன்றனர். ரியோ டி ஜெனிரோ நகரில் கடந்த செவ்வாய் கிழமை தொடங்கிய இந்த நடவடிக்கை நேற்றும் நீடித்தது.
போதைப் பொருள் கடத்தல் கும்பலுடனான மோதலில் 4 காவலர்களும் உயிரிழந்தனர். பென்ஹா என்ற இடத்தில் உயிரிழந்த போதை கும்பலைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்டவர்களின் உடல்களை சாலையில் கிடத்தி காவல்துறையினர் பிறருக்கு எச்சரிக்கை விடுத்தனர்.
ஐக்கிய நாடுகளின் காலநிலை உச்சிமாநாட்டில் பங்கேற்க பிரிட்டிஷ் இளவரசர் வில்லியம் பிரேசில் செல்ல உள்ள நிலையில் அதற்கு முன்பாகவே போதைக் கும்பலைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu