தமிழ்நாடு
கொட்டும் மழையில் சிங்கிளாக சிறுத்தை.. பேக்கரிக்காக டீலிங் ..! ஆப்பு வைத்த பெண் அதிகாரி..!
Oct 30, 2025 01:29 AM
249
கொட்டும் மழையில் சிங்கிளாக சிறுத்தை... பேக்கரிக்காக டீலிங் ..!
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பேக்கரி ஒன்றின் மின் இணைப்பை துண்டிக்க உத்தரவிட்ட மாசுகட்டுப்பாட்டு வாரிய பெண் அதிகாரியை கண்டித்து, விடுதலை சிருத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் கொட்டும் மழையில் சிங்கிளாக ஆர்ப்பாட்டம் செய்த நிலையில் , அவர் மீது பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச்சட்டத்தில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர் .
கொட்டும் மழையில் ஒற்றை குரலாய் போர் முழக்கமிடும் சிறுத்தையை பாரீர்..! அடாத மழையிலும் , அடங்க மறுத்து சிங்கிளாக சீறும் சிறுத்தையை பாரீர்..!எதற்காக இந்த ஆர்ப்பாட்டம் ..? மழை நீர் தேங்கி குண்டும் குழியுமாக காட்சி அளிக்கும் நாகர்கோவில் மாநகராட்சி சாலைகளை சீரமைக்க கோரியா, அல்லது வாகன ஓட்டிகளை விபத்தில் சிக்க வைக்கும் அவலத்தை தடுக்க கோரியா ? அது தான் இல்லை..!
உரிமம் இன்றி செயல்பட்ட பேக்கரியின் மின் இணைப்பை துண்டிக்க உத்தரவிட்டு நேர்மையாக நடந்து கொண்ட பெண் அதிகாரியை கண்டித்து தான் இந்த ஆர்ப்பாட்டம்...! தான் செய்து கொண்ட பேக்கரி டீலிங்கிற்காக சிறுத்தை சிங்கிளாக நின்று வசைப்பாடும் காட்சிகள் தான் இவை..!
கன்னியாகுமரி மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரியாக பணியாற்றி வருகிறார் பாரதி. சமீபத்தில் நாகர்கோவிலில் உள்ள இத்தாலியன் பேக்கரியில் ஆய்வு செய்த போது, பேக்கரி அனுமதியின்றி இயங்கி வருவது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த பேக்கரியின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இந்த நிலையில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி பாரதியின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் அல்காலித், சம்பந்தப்பட்ட பேக்கரிக்கு ஆதரவாக நாகர்கோவிலில் உள்ள மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக அறிவித்தார். இதையடுத்து ஒரு மணி நேரத்தில் அந்த பேக்கரிக்கு மீண்டும் மின் இணைப்பு கொடுக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.
இருந்தாலும் “சொன்ன சொல் தவற மாட்டான் இந்த அல்காலித் என்று விசிக மாவட்ட செயலாளர் தனது ஆதரவாளர்கள் சிலரை வைத்துக் கொண்டு கொட்டும் மழையில் சிங்கிளாக சீற்றத்துடன் பேசி ஆர்ப்பாட்டம் நடத்தினார்
இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநகர மாவட்ட செயலாளர் அல்காலித் உள்ளிட்டோர் மிகவும் அவதூறு ஏற்படுத்தும் வகையில் தரக்குறைவான வார்த்தைகளால் தன்னை விமர்சித்து பேசியதாக வடசேரி காவல் நிலையத்தில் பெண் அதிகாரி பாரதி புகார் அளித்தார்.
புகாரின் பேரில் சிறுத்தை அல்காலித், தோழர் மணவை கண்ணன், பேக்கரி உரிமையாளர் முகமது இஸ்மாயில் ஆகிய 3 பேர் மீதும் பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu